Forum

Please or Register to create posts and topics.

சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம ராசி 2020

சிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்.80/100.

2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.

இக்காலகட்டங்களில் சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

சினம் கொண்ட சிங்கம் ,சிங்கிளாக சிலிர்த்தெழுந்து, சீறிப்பாய்ந்து, சிங்கிளாக சிக்ஸ் அடித்து, சிரசில் மணி மகுடத்தை தரிக்க போகும் நேரமிது. ஆம்.

சிம்மராசிக்கு சனிபகவான் தற்போது 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

6ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -8ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 3ம்இடத்தையும் பார்ப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் மிக நல்ல அபரிமிதமான பலன்களை அடையப்போகும் ராசிகளில் சிம்ம ராசியும் ஒன்று.

இருள்நீங்கி கிழக்கே சூரியன் உதிப்பது போல உங்கள் வாழ்வில் இதுநாள்வரை சூழ்ந்திருந்த துன்பங்கள் எனும் கருமேகங்கள் விலகி, சூரியன் சுடர்விட்டு பிரகாசிக்க தொடங்கியது போல் வாழ்க்கை ஒளிரும்.

இனி சிம்மம் சிலிர்த்தெழுந்து சீறிப்பாயும்.

கோச்சாரத்தில் ஆறாம் இடத்தில் சனி, 6ம் இடத்தில் குரு , 10ல் ராகு என மூன்று பெரிய ராஜ கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளன.குரு மட்டும் சுமார்.

அடுத்த குருப்பெயர்ச்சிக்குப் பின் சிம்ம ராசிக்காரர்கள் எதிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவர்.

இக்காலம் உங்களுக்கு பொற்காலமாக அமையும்.

உங்கள் சுய ஜாதகம் மிக யோகமாக இருக்கும் பட்சத்தில் எண்ணிய எண்ணம் அனைத்தும் ஈடேறும்.

சூரியனின் ஆதிக்கத்தைப் பெற்ற சிம்மராசிக்காரர்கள் எதிலும் தனித்துவமாக விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

தற்போது அதற்கான கிரகநிலைகள் மிக அருமையாக உள்ளது.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கூடும் .புதிய தொழில் தாராளமாக துவங்கலாம்.

பணி உயர்வு ,பதவி உயர்வு போனஸ் இன்கிரிமெண்ட் என அனைத்தும் கைகூட பெரும் காலம் இது.

மாணவர்கள் சிறப்பாக கல்வியில் தேர்ச்சி பெறுவர். சிலருக்கு மாவட்ட அளவிலும் ,மாநில அளவிலும் ரேங்க் பெரும் யோகமுண்டு.

நினைத்த கல்லூரியில், நினைத்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

சிலருக்கு ஏற்கனவே தடைப்பட்டிருந்த பாடங்களைப் படித்து ,நல்ல முறையில் தேர்ச்சி பெறுவர்.

திருமண வயது உடையவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆகும். திருமணமாகி ஒரு வருடத்தில் குழந்தையையும் எதிர்பார்க்கலாம்.

அரசியலில் இருப்பவர்களுக்கு ,புது பதவிகள் கிடைக்கப்பெறும்.

அரசாங்கத்தில் டெண்டர் போன்றவற்றிற்கு அப்ளை செய்து உள்ளவர்களுக்கு அது நல்ல முறையில் கிடைக்கும்.

தேர்தலில் போட்டியிடும் சிம்மராசியினருக்கு ,பதவிகள் கிடைக்கப் பெறும்.( உங்கள் சுய ஜாதகம் யோகமாக இருக்கும் பட்சத்தில்)

கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும் .சிலருக்கு மொத்த கடனும் முழுமையாக அடையும் காலம் இது.

உடல் நலம் சீராக இருக்கும் .

எந்த தொழில் செய்தாலும் பெரிய அளவில் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் தாராளமாக செய்யலாம் .வேலை கிடைக்கும்.

கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி கருத்தொற்றுமையான இனிமையான வாழ்வு அமையும்.

ஆறில் சனி இருப்பதாலும், உங்கள் ராசியாதிபதி சூரியன் என்பதாலும் அரசாங்க அல்லது உயர் மட்டத்திலான நபர்களின் தொடர்பு கிடைப்பதால் எதிரிகள் ஒடி ஒளிவர்.

கொடுத்த கடன்கள் வசூலாகும். கடனில் இருந்தவருக்கு கடன்கள் கட்டுப்படும்.

வல்லவன் வகுத்ததே சட்டம் என்பது போல உங்கள் வாக்கு இனி எடுபடும்

சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனின் எண்ணம் அனைத்தும் ஈடேற கூடிய காலமாக இக்காலம் இருக்கிறது. நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் இனி ஜெயமே.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:::

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை திருச்செந்தூர் ,திருப்பதி,

திருவண்ணாமலை சென்று வரவும்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More