Forum
சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா ராசி 2020
Quote from Sri Ramajeyam Muthu on December 24, 2020, 5:54 amதுலா ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்.55/100.
2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.
இக்காலகட்டங்களில் துலாராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
துலா ராசிக்கு சனிபகவான் தற்போது 3ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
4ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -6ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 1ம்இடத்தையும் பார்ப்பார்.
துலாராசிக்கு அர்தாஷ்டம சனி ஆரம்பம்.
அஷ்டம சனியில் பாதி ,அர்தாஷ்டம சனி என்பார்கள்.
அர்த்தாஷ்டமச் சனி என்பது சுமாரான அமைப்பே .இதில் மாற்றுக் கருத்து இல்லை .
நாலாம் இடமான வீடு ,மனை ,வண்டி, வாகனம் ,தாயார் மற்றும் சுக ஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் இவை அனைத்தையும் பாதிப்பார்.
நாலாம் இடத்தில் ஆட்சியாகும் சனி அங்கிருந்து ஏழாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
வியாபாரத்தில் தேக்க நிலை ஏற்படலாம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.வேலைகள் கடினமாக இருந்தாலும், கனிவுடன் கையாள்வது நல்லது.
புதிய தொழில் தற்போது பெரிய முதலீட்டில் ஆரம்பிக்க வேண்டாம் .ஒரு வருடடம் ஆகட்டும்.
சனி தற்போது வந்திருக்கும் இடம் சுக ஸ்தானம் என்பதால் உடல்நிலையில் கண்டிப்பாக கவனம் தேவை.
சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவமனை சென்று அதற்கேற்ற பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
60 வயதைக் கடந்தவர்கள் குறிப்பாக எலும்புகள் ,மூட்டுகள் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக அதற்கேற்ற சிகிச்சை பெறுவது நல்லது.
சனி மூன்றாம் பார்வையால் 6-ம் இடத்தைப் பார்ப்பதால் கடன்கள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் .இருந்தாலும் கடனை வாங்கி கடனை அடைப்பது கூடாது.
கோர்ட் கேஸ் விவகாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் லக்னத்தை பார்ப்பதால் மனதில் இனம்புரியாத கவலைகள் சுற்றி வந்து கொண்டே இருக்கும்.
உடல் அலைச்சல் அதிகமாகும் . அதிக உணர்ச்சி வசப்படுவதை தவிர்ப்பது நல்லது
வரும் குரு பெயர்ச்சிக்குப் பின் சனியின் கெடுபலன்கள் பாதிக்குமேல் கண்டிப்பாக குறையும் .அந்த காலகட்டங்களில் வீடு ,மனை, வண்டி வாகனம் போன்றவை வாங்குவதால் சுபச்செலவுகள் ஏற்படும்.
புதிதாக வீடு கட்ட விரும்புவோர் அடுத்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஆரம்பிக்கவும் .அதுபோல் வாகனங்களை மாற்ற விரும்புவோர் அந்த காலகட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளவும்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அரங்கேருவதில் எந்த தடையும் இல்லை.
மணமான மணமக்களுக்கு, மறுவருடம், மழலை பாக்கியம் உண்டு.
மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் அக்கறையுடன் படிப்பது நல்லது.
புதிதாக அடமானம் வைப்பது, ஜாமீன் போடுவது கண்டிப்பாக கூடாது.
உங்கள் சுய ஜாதகத்தில் கெடுதலான தசாபுத்திகள் இருப்பின் வண்டி வாகனங்களை வேகமாக இயக்குவதை தவிர்க்கவும்.
சிலருக்கு தாய்க்கு கருமம் செய்ய வேண்டிய கால சூழ்நிலைகளும் வரலாம்.
4-ஆம் இடமான தாயார் ஸ்தானத்தில் சனி ஆட்சி பெறுவதால் தாயாரின் உடல் நிலையிலும் கவனம் தேவை.
குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலம் நல்ல மாற்றம் பெரும்.
சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்:::
உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.
பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.
ஓம் நமசிவாய
துலா ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்.55/100.
2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.
இக்காலகட்டங்களில் துலாராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
துலா ராசிக்கு சனிபகவான் தற்போது 3ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
4ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -6ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 1ம்இடத்தையும் பார்ப்பார்.
துலாராசிக்கு அர்தாஷ்டம சனி ஆரம்பம்.
அஷ்டம சனியில் பாதி ,அர்தாஷ்டம சனி என்பார்கள்.
அர்த்தாஷ்டமச் சனி என்பது சுமாரான அமைப்பே .இதில் மாற்றுக் கருத்து இல்லை .
நாலாம் இடமான வீடு ,மனை ,வண்டி, வாகனம் ,தாயார் மற்றும் சுக ஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் இவை அனைத்தையும் பாதிப்பார்.
நாலாம் இடத்தில் ஆட்சியாகும் சனி அங்கிருந்து ஏழாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
வியாபாரத்தில் தேக்க நிலை ஏற்படலாம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.வேலைகள் கடினமாக இருந்தாலும், கனிவுடன் கையாள்வது நல்லது.
புதிய தொழில் தற்போது பெரிய முதலீட்டில் ஆரம்பிக்க வேண்டாம் .ஒரு வருடடம் ஆகட்டும்.
சனி தற்போது வந்திருக்கும் இடம் சுக ஸ்தானம் என்பதால் உடல்நிலையில் கண்டிப்பாக கவனம் தேவை.
சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவமனை சென்று அதற்கேற்ற பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
60 வயதைக் கடந்தவர்கள் குறிப்பாக எலும்புகள் ,மூட்டுகள் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக அதற்கேற்ற சிகிச்சை பெறுவது நல்லது.
சனி மூன்றாம் பார்வையால் 6-ம் இடத்தைப் பார்ப்பதால் கடன்கள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் .இருந்தாலும் கடனை வாங்கி கடனை அடைப்பது கூடாது.
கோர்ட் கேஸ் விவகாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் லக்னத்தை பார்ப்பதால் மனதில் இனம்புரியாத கவலைகள் சுற்றி வந்து கொண்டே இருக்கும்.
உடல் அலைச்சல் அதிகமாகும் . அதிக உணர்ச்சி வசப்படுவதை தவிர்ப்பது நல்லது
வரும் குரு பெயர்ச்சிக்குப் பின் சனியின் கெடுபலன்கள் பாதிக்குமேல் கண்டிப்பாக குறையும் .அந்த காலகட்டங்களில் வீடு ,மனை, வண்டி வாகனம் போன்றவை வாங்குவதால் சுபச்செலவுகள் ஏற்படும்.
புதிதாக வீடு கட்ட விரும்புவோர் அடுத்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஆரம்பிக்கவும் .அதுபோல் வாகனங்களை மாற்ற விரும்புவோர் அந்த காலகட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளவும்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அரங்கேருவதில் எந்த தடையும் இல்லை.
மணமான மணமக்களுக்கு, மறுவருடம், மழலை பாக்கியம் உண்டு.
மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் அக்கறையுடன் படிப்பது நல்லது.
புதிதாக அடமானம் வைப்பது, ஜாமீன் போடுவது கண்டிப்பாக கூடாது.
உங்கள் சுய ஜாதகத்தில் கெடுதலான தசாபுத்திகள் இருப்பின் வண்டி வாகனங்களை வேகமாக இயக்குவதை தவிர்க்கவும்.
சிலருக்கு தாய்க்கு கருமம் செய்ய வேண்டிய கால சூழ்நிலைகளும் வரலாம்.
4-ஆம் இடமான தாயார் ஸ்தானத்தில் சனி ஆட்சி பெறுவதால் தாயாரின் உடல் நிலையிலும் கவனம் தேவை.
குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலம் நல்ல மாற்றம் பெரும்.
சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்:::
உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.
பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.
ஓம் நமசிவாய