கன்னி ராசி குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023

0 63

Disclaimer: இவைகள் யாவுமே பொதுவான பலன்களே. உங்கள் ஜனன ஜாதகத்தின் கிரக நிலையை பொறுத்தும் தசா புத்திகளை பொருத்தும் ஜாதக வலுவை பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்சிகளையும் பொருத்தும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும் எனவே எந்த காரியத்தை செய்யும் முன்பு உங்களுடைய ஜோதிடரிடம் அல்லது என்னிடம் ஜாதகத்தை காண்பித்து முடிவு செய்வது சிறப்பை தரும்

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023:

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.04.2023) சனிக்கிழமை சூரிய உதயாதி 43.30 நாழிகைக்கு இரவு 11:26 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்

திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023:

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி (21.04.2023) வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி 58.14 நாழிகைக்கு மறுநாள் விடியற்காலை 05:14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.

கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7 மிடமான களத்திர ஸ்தானத்திலிருந்து கொண்டு களத்திர குருவாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் பலவித நன்மைகள் நடந்திருக்கும். திருமணம் முடிந்திருக்கும் மனைவியால் யோகம் ஏற்பட்டிருக்கும் புது வித உறவுகளுக்கு வழிமுறை செய்திருக்கும் சொந்தம் சுற்றத்தில் சுபச் செலவு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு அந்தஸ்து கௌரவம் மரியாதை உயர்ந்திருக்கும்

இனி அடுத்த ஒரு வருட காலம் உங்கள் ராசிக்கு 8 மிடத்தில் அட்டம ஸ்தானம் எனப்படும் இடத்திற்கு அட்டம குருவாக பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் உங்கள் 2, 4 & 6 ஆகிய இடங்களை இனி பார்வை செய்வார்.

Jothida Rathna Chandrasekaran Post

அட்டம் குரு
“இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானது”
எட்டில் குரு வந்த காலத்தில் வாலிக்கு பட்டம் இழந்த காலம்

எனவே எல்லா வகையிலும் இழப்பீடுகள் இருந்தே தீரும்.

அட்டமத்து குரு தொட்டது துலங்காது என்பார்கள்.

“கேளப்பா எட்டுக்கு வேசி கள்ளன் கெடுதியுள்ள மனைவியும் பகை நோயால் கண்டம், ஆளப்பா பகையுடன் பொருள் சேதம் அப்பனே அவமானம் கொள்வான்”

இது புலிப்பாணி பாடல்

இதன் பொருள்,. புகழ் பொருள் உயிரிழப்பீடுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடை உண்டாகும், சுப காரியங்கள் தடைபடும், விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படும், பிள்ளைகளால் தொல்லை அவமானங்கள் ஏற்படலாம்.

பண நெருக்கடிகள் ஏற்படும்

கொடுக்கல் வாங்கல்களை தவிர்ப்பது நல்லது

வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்

அத்தியாவசியம் இல்லாத விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை தவிர்க்கும் காலம்

வீடு கட்டுவதை ஒத்தி வைக்கலாம்

சுகம் கெடும் அலைச்சல்கள் உண்டாகும்

கடன் நெருக்கடி அதிகரிக்கும் கடன் கொடுத்தவர்களின் தொந்தரவுகள் உண்டாகும்

உடல்நலம் பாதிக்கப்படும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்

எதிரிகளால் தொந்தரவுகள் உண்டாகும்

கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் உண்டாகும் அறுவை சிகிச்சைகள் நடக்கும்

உறவுகளில் விரிசல் ஏற்படும்

ஜோதிட கட்டுரை

தேவையில்லாத வாக்குறுதியை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்

இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் இயந்திரங்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும்

வியாபாரம் தொழில் செய்பவர்கள் விஸ்தரிப்பு செய்வது புதிய இயந்திரங்களை நிறுவுவது ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்

வியாபாரம் தொழில் செய்பவர்கள் கடன் சுமை அதிகரிக்கும் தேவையில்லாத கடன்களை வாங்குவதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்

வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு தொழில் வழியில் போட்டிகளை அதிகம் சந்திக்கும் காலகட்டமாக இருக்கும்

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட சிறப்பு
பிராமணர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய நன்மை
வியாழக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு காலை 6:30 மணி முதல் ஏழரைக்குள் நெய் தீபம் ஏற்றி வழிபட சிறப்பு

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More