திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கப்படி சித்திரை மாதம் 18 (01.05.2024) புதன்கிழமை பகல் 1 மணியளவில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
கடந்த ஓராண்டாக உங்களுக்கு மூன்றாம் இடத்தில் குருவாக இருந்தார் இந்த காலகட்டத்தில் பலவிதமான அசுப பலன்களான நம்மை சுற்றி உள்ள உற்றார் உறவினர், உறவு நட்பு பதவி பணம் போன்ற இழப்புகளை சந்தித்திருப்பீர்கள்.
தற்போது உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் பெயர்ச்சி ஆகிறார் இதுவும் அசுபமான பலன்களையே தரும் நிலையில் உள்ளது ஆகையால் கீழ்கண்ட அசுப பலன்கள் நடந்தேறும்.
குரு பகவான் ஐந்தாம் பார்வையாக எட்டாம் இடத்தையும் ஏழாம் பார்வையாக பத்தாம் இடத்தையும் ஒன்பதாம் பார்வையாக பன்னிரண்டாம் இடத்தையும் பார்வை செய்கிறார்.
- “தர்ம புத்திரன் நாளிலே வனவாசம் படி போனதும்” என்ற பாடல் படி நாலாமிடமான பூமி வீடு வாகனம் சுகம் தாய் கல்வி இந்த வகையில் குறைபாடுகள் ஏற்படும்,
- தாயாரின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கும் மருத்துவச் செலவுகள் ஏற்படும்,
- அடிக்கடி வண்டி வாகன செலவுகள் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும்,
- மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கல்வியில் தடை தாமதங்கள் உண்டாகும். விரும்பிய கல்வி அமையாது,
- வீடு மனை சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரங்களில் தொல்லைகள் அதிகரிக்கும் பிரச்சனைகளை சந்திக்கும் காலம்,
- சுகம் கெடும்,
- வங்கி இருப்பு கரையும்,
- இருந்தாலும் கீழ்கண்ட சுப பலன்கள் நடக்கும்.
- வேலைகளில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும் வெளிநாடு வேலைகள் அமையும் வேலை நிமித்தமாக அலைச்சல்கள் உண்டாகும் பின்பு தீர்வு கிடைக்கும்,
- தண்ட செலவுகள் குறையும் விரயங்கள் குறையும் காலகட்டம்,
- தெய்வீக தரிசனம் தீர்த்த யாத்திரை தூர பயணங்கள் ஏற்படும்,
- மரண பயம் நீங்கும் உடல் நலம் தீரும் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டு,
- எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும்,
- திடீர் லாட்டரி புதையல் போன்ற கேம்லிங் தொகை கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் :
- திருச்செந்தூர் முருகன் வழிபாடு.
- வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய்விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வர தொல்லைகள் குறையும்.
- குருமார்களுக்கு வஸ்திரதானம் செய்ய சிறப்பு.
மேற்கண்ட பலன்கள் அனைத்துமே பொதுவானவையே உங்களின் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகநிலை பொருத்தும் மற்ற கோச்சார கிரக பெயற்சிகளை பொருத்தும் தசா புத்தி பொருத்தும் பலனில் மாற்றங்கள் உண்டாகும். எனவே புதிய செயல்களை அல்லது காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பது நன்மையை தரும்.