குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் (2021-2022-2023) தனுசு ராசி

1,274

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (13.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 30.24 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

எனவே ஒவ்வொரு ராசிக்கும் முதல் 5 மாதம் ஒரு வித பலனையும் அடுத்த ஒரு வருடம் ஒரு விதமான பலன்களையும் தர இருக்கிறார்

வரும் 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் தைரியம் வீரியம் இளைய சகோதரம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 3ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 3 மிட குருவாகிறார்.

3 மிட குருவாகி களத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 7 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும்
பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட ஐந்து மாதத்திற்குள் சுப & அசுப பலன்கள் நடந்தேறும்

“தீதிலா தொரு மூன்றிலே
துரியோதனன் படை மாண்டதும்”
என்பது ஜோதிடப் பாடல்

“தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு மூன்றில் தார்வேந்தர் பகையும் உண்டு,ரோகமும் உண்டு”
என்பது புலிப்பாணி பாடல்
இதன் பொருள் நம்மை சுற்றி உள்ள உற்றார் உறவினர் நட்பு பதவி பணம் முதலிய படைகள் அழியும் பொருள் விரயம் ஏற்படும்.

உற்றார் உறவினர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்

நட்புகள் வழியில் எச்சரிக்கை அவசியம்

இளைய சகோதரர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்

முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை

பண விஷயங்களில், கொடுக்கல் வாங்கலில், முதலீடுகள் செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நீண்ட நாட்களாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் நாள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும்

திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். நீண்ட நாட்களாக திருமணத்துக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும். முதிர்கன்னி களுக்குத் திருமணம் நடந்தேறும் காலகட்டம்.

அடிக்கடி தூர பயணங்கள் ஏற்படும்

புதிய நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். பொதுஜன தொடர்புகள் அதிகரிக்கும். நீங்கள் சந்திக்கும் நபர்கள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அமையும். இரண்டாவது மூன்றாவது குழந்தை பாக்கியமும் அமையும் வாய்ப்பு உண்டு.

தந்தையின் உடல்நலம் சரியாகும். தந்தையின் மூலம் நன்மைகள் ஏற்படும் காலம். தந்தை வழியில் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் மற்ற இதர வகையான நன்மைகள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

பாக்கியங்களும் நன்மைகளும் நிறைந்த காலகட்டம்.

உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் இவர்களுக்கு லாபகரமான காலகட்டம். பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் ஊர்மாற்றம் அமையும்.

நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த நல்ல பணி நல்ல வேலைகள் அமையும் காலகட்டம்.

தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபங்கள் வந்து சேரும். வியாபார அபிவிருத்தி தொழில் அபிவிருத்தி ஏற்படும். விரிவாக்கம் விஸ்தரிப்பு அவையும் காலகட்டம். ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலைத் தொடங்கும் காலகட்டம்.

புதிய பொன் பொருள் ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். விலையுயர்ந்த பொருட்கள் சேரும் காலகட்டம். நினைத்ததையெல்லாம் வாங்கும் காலகட்டம்.

உங்கள் ஆசை அபிலாசைகள் முழுவதுமாக நிறைவேறும் காலகட்டம். மூத்தவர்கள், சகோதரர்கள் சகோதரிகள் மூலம் நன்மைகளும் ஆதாயங்களும் வந்துசேரும்.

நீண்டகாலமாக நிறைவேறாமல் இருந்த புனித யாத்திரைகள், தீர்த்த யாத்திரைகள்,. கோவில் வழிபாடுகள் குலதெய்வ வழிபாடுகள் நடக்கும், பூர்வீகத்தில் உள்ள கோயில் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்

வீட்டில் சுபகாரியங்கள் நடந்தேறும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்

எதிலும் ஆதாயங்கள் அதிகமாக கிடைக்கும் காலகட்டம்.

வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் தாய் வீடு வண்டி வாகனம் சுக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 4ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 4 மிட குருவாகிறார்.

4 மிட குருவாகி அட்டம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் அயன போக சுகம் விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய
12 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப & அசுப பலன்கள் நடந்தேறும்.
“தருமபுத்திரர் நாலிலே
வனவாசம் அப்படிப் போனதும்”
என்ற பாடலின் படி

நான்காம் இடமான பூமி வீடு வண்டி வாகனம் சுகம் தாய் கல்வி இந்த வகையில் குறைபாடுகள் ஏற்படும்.
தாயாரின் உடல் நல பாதிப்புகள் அதிகப்படும் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

வண்டி வாகனங்களில் அடிக்கடி பழுதுகள் ஏற்படும் தேவையில்லாத அர்த்தமற்ற செலவுகள் ஏற்படும். திடீர் பழுது காரணமாக அவதிகள் ஏற்படும். வண்டி வாகன பயணத்தில் மிக மிக எச்சரிக்கை அவசியம். பழைய வண்டிகளை மாற்றி புதிய வண்டிகளை வாங்கிக் கொள்வது சிறப்பு

பூமி மனை வீடு இவைகளில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம். புதிய சொத்துக்கள் வாங்குவதில் மிகுந்த கவனமும் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். வீடு மாற்றங்கள் உண்டாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் வேறு இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டிய காலகட்டங்கள். நிலத்தகராறு நிலத்தில் உள்ள பிரச்சனைகள் அதிகமாக சந்திக்கும் காலகட்டம்.

சுகக் கேடுகள் அதிகரிக்கும். இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. நெஞ்சு சார்ந்த வலி வேதனைகள் ஏற்படும்.

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனம் தேவை. விரும்பிய கல்வி கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். தேர்வு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்

வியாபாரிகள் தொழிலதிபர்கள் புதிய இயந்திரங்களை நிறுவி வகையில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை. அடிக்கடி இயந்திரப் பழுதுகள் ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும். எனவே புதிய இயந்திரங்களை மாற்ற சிறப்பு.

வங்கி இருப்பு கரையும் காலகட்டம். பண சங்கடங்கள் ஏற்படும். புதிய முதலீடுகள் பிரச்சனைகளை தரும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மறைமுகப் பிரச்சனைகள் தொந்தரவுகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.

பங்கு சந்தையில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வாழும் காலகட்டம் இது.

அடிக்கடி தூர பயணங்கள் ஏற்படும் வேலை நிமித்தமாக.

அரசு ஊழியர்கள் உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடங்களில் இடமாற்றம் உண்டாகும் புதிய பதவிகள் பொறுப்புகள் கிடைக்கும். கௌரவப் பதவிகள் வந்து சேரும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும் காலகட்டம்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வியாபாரங்கள் தொடங்கும் காலகட்டம். இருக்கும் தொழிலில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். விரிவாக்கங்கள் நடைபெறும் காலகட்டம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நன்மைகள் கூடிவரும்.

தண்ட விரைய செலவுகள் குறையும் காலகட்டம். சுப விரயங்கள் ஏற்படும்.

நிம்மதியான உறக்கம் ஏற்படும். அயன சயன போகம் இவற்றில் குறைபாடுகள் நீங்கும்.

திருமணம் நடந்தேறும் காலகட்டம்

நீண்ட நாட்கள் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலகட்டம். கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் தீரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலகட்டம்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
வேத பாடசாலையில் படிக்கும் பிராமணர் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது நலம்.
யானைக்கு அடிக்கடி கரும்பு வாங்கி தர சிறப்பு

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More