குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் (2021-2022-2023) கும்ப ராசி
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (13.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 30.24 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
எனவே ஒவ்வொரு ராசிக்கும் முதல் 5 மாதம் ஒரு வித பலனையும் அடுத்த ஒரு வருடம் ஒரு விதமான பலன்களையும் தர இருக்கிறார்
வரும் 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகி ஜென்ம குருவாகிறார்.
ஜென்ம குருவாகி பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கியம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 5 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் ருண ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 7 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட ஐந்து மாதத்திற்குள் சுப & அசுப பலன்கள் நடந்தேறும்
‘ஜென்ம ராமர் சீதை வனத்திலே சிறை வைத்ததும்”
என்பதற்கேற்ப
இது உங்களுக்கு வனவாச காலம் ஆகும் எனவே உங்களுக்கு இது பாதகமான காலமாக இருக்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் தந்தையுடன் மனகசப்பு முதலீட்டில் பாதிப்பு வேளையில் மந்தப் போக்கு சகோதர வழி வருத்தம் ஏற்படும் காலகட்டம்.
“ஓணான் வேலிக்கு இழுக்க தவளை தண்ணீருக்கு இழுக்க”
என்பது பழமொழி போல் வாழ்க்கை நிகழ்ச்சி இருக்கும்.
திருமணங்கள் தடைபடும் காலம்
கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும்
கொடுக்கல்-வாங்கலில் தடை தாமதங்கள் உண்டாகும்
உடல்நிலை குறைவு அடிக்கடி ஏற்படும்.
இருந்தாலும் 5,7,9 ஆகிய இடங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால். கவனமாக இருந்தால் மேற்கண்ட கடுமையான பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு செயல்படுவது வேலை பிரச்சனையும் குடும்பத்தில் ஏற்படப்போகும் பிரச்சனைகளையும் தீர்க்கும்
திருமணம் நிறைவேறுவதில் பலவித சங்கடங்கள் தடைகள் ஏற்பட்டு திருமணம் முடிவாகும். பிறருக்கு திருமணம் முடிவாகி தடைபடும் அல்லது கால தாமதப்படும். சிலருக்கு உடனடியாக நடந்தேறும்.
குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம்.
புதிய முதலீடுகளில் கவனம் தேவை
விரும்பத்தகாத இடமாற்றங்கள் வேலை மாற்றங்கள் வேலை இழப்புகள் ஏற்படும் காலம்.
வேலை நிமித்தமாக தூர பயணங்கள் வெளிநாடு பயணங்கள் ஏற்படும் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் பலவித சங்கடங்களை சந்தித்து காலகட்டம்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் தனம் குடும்பம் வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 2 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி தன குருவாகிறார்.
தன குருவாகி ருன ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் அட்டம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 0 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப பலன்கள் நடந்தேறும்.
தன வரவுகள் அதிகரிக்கும். கையில் தாராள பணப்புழக்கம் ஏற்படும்.
உங்கள் வாக்கிற்கு மரியாதை ஏற்படும். உங்கள் சொல்படி அனைவரும் நடக்கும் காலகட்டம்
ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்படும். படிப்பில் இருந்த சுனக்கங்கள் நீங்கும்.
உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் புதிய முயற்சிகள் கைகூடும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும்
உடல் நலம் முழுமையாக சரியாகும். நீண்ட நாட்களாக நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு பரிபூரன சுகம் கிட்டும். மருத்துவமனையில் இருந்தவர்கள் நோயால் விடுபட்டு வீட்டிற்கு வந்து சேரும் காலகட்டம் மருத்துவச் செலவுகள் குறையும்.
கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக முடிவுக்கு வரும். கடன்கள் அனைத்தும் தீரும். அதிக வட்டி தொகைக்கு வாங்கிய கடன்கள் வங்கிகள் மூலம் குறைவான வட்டியில் வாங்கி அடைக்கும் காலகட்டம். புதிய வங்கிக் கடன்கள் கிடைக்கும்.
எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் மறையும். எதிரிகள் இல்லை என்ற நிலை உருவாகும்.
நீண்ட நாட்களாக நடந்து கொண்டு நடந்து கொண்டிருந்த வழக்குகள் முடிவுக்கு வரும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
புதிய வேலைவாய்ப்புகள் அமையும். நீண்டகாலமாக வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அமையும். புதிய வேலைக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் கௌரவப் பதவிகள் வந்து சேரும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் வியாபாரம் மேன்மையடையும் புதிய தொழில் தொடங்கும் காலம் கட்டம் விஸ்தரிப்பு ஏற்படும். விரிவாக்கம் ஏற்படும். புதிய கூட்டுத் தொழில் அமையும் . கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம்.
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கௌரவப் பதவிகள் புதிய புதிய பொறுப்புகள் வசதி வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதாயமும் வந்து சேரும். மேலதிகாரிகளின் ஆதாயங்கள் கிடைக்கும்.
பங்குசந்தைகளில் உள்ளவர்களுக்கு லாபகரமான காலகட்டமாக இருக்கும்.
மறைமுக நோய்கள் நீங்கும் காலகட்டம். மறைமுக உறுப்புகளில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
எதிர்பாராத லாபங்கள் ஆதாயங்கள் வந்து சேரும்.
நீண்ட கால முதலீடுகள் தொடங்கும் காலகட்டம்
அனைத்து காரியங்களும் சுபமாக நடக்கும் காலகட்டம் மிக சிறப்பான காலகட்டம்
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
வேத பாடசாலையில் படிக்கும் பிராமணர் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது நலம்.
யானைக்கு அடிக்கடி கரும்பு வாங்கி தர சிறப்பு
எச்சரிக்கை:
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்
Comments are closed.