குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் (2021-2022-2023) துலா ராசி

1,000

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (13.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 30.24 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

எனவே ஒவ்வொரு ராசிக்கும் முதல் 5 மாதம் ஒரு வித பலனையும் அடுத்த ஒரு வருடம் ஒரு விதமான பலன்களையும் தர இருக்கிறார்

வரும் 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 5 மிட குருவாகிறார்.

5 மிட குருவாகி பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் லாபம் ஆசை அபிலாசைகள் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் உங்கள் ராசியை 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட ஐந்து மாதத்திற்குள் சுப பலன்கள் நடந்தேறும்.
5-ஆம் இடம் என்பது புத்திரம், குரு உபதேசம், உபாசனை, மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், பூர்வ புண்ணியம் இவைகளை குறிக்கும். இக்காலத்தில் மன மகிழ்ச்சியான செயல்கள் நடைபெறும்.

திருமணமாகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் நிறை வேறும் காலகட்டம். முதிர்கன்னி களுக்கும் திருமணம் நடந்தேறும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும் காலகட்டம். இரண்டாவது திருமணம் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் நிறை வேறும் காலகட்டம்.

கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அல்லது பிரிவுகள் மறைந்து ஒன்று சேரும் காலகட்டம்.

பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேரும் காலகட்டம்.

காதல் செய்பவர்கள் காதலில் வெற்றி பெறும் காலம் திருமணம் நடந்தேறும். பெற்றோர்களின் ஆதரவும் கிடைக்கும்

திருமணமானவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் ஏற்படும்.

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் அமையும்.

பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் குழந்தை பாக்கியம் கிட்டும்.

நீண்டகால ஆசைகள் கோரிக்கைகள் நிறைவேறும்

உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்

புனித யாத்திரைகள் தீர்த்த யாத்திரைகள் நிறைவேறும் காலகட்டம். தூரதேச பயணங்கள் ஏற்படும்

தடைபட்டிருந்த குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடுகள் முறையாக நடந்தேறும். குலதெய்வ கோயில் கட்டும் பணியும் அல்லது மராமத்துப் பணிகள் மேற்கொள்ளும் காலகட்டம். அதற்குண்டான சுபச் செலவுகளும் இருக்கும்.

புதிய குருமார்களின் உபதேசம் கிட்டும்.

உபாசனை தெய்வத்தின் அருள் கிடைக்கும்

தாய்மாமன் பாட்டனார் வழியில் நன்மைகள் வந்து சேரும் ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்.

சுப நிகழ்வுகள் குடும்பத்தில் நடந்தேறும்

பலவித பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்

எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்

மிக சிறப்பான காலகட்டம்

வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் ருன ரோக சத்ரு ஸ்தானம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 6மிட குருவாகிறார்.

6 மிட குருவாகி கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் தனம் குடும்பம் வாக்கு என்று சொல்லக்கூடிய 2 மிடத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் அசுப பலன்கள் நடந்தேறும்.

இது மிக மோசமான இடம்.

“சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்” என்பது ஜோதிடப் பாடல்
” தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு தார்வேந்தர் பகை உண்டு ரோக முண்டு” – என்கிறது புலிப்பாணி பாடல்

இதன் பொருள் இந்த காலகட்டத்தில் தரையில் கிடக்கும் தங்கத்தை தன் கைப்பட்டு எடுத்தால் பித்தளை ஆக மாறிவிடும் அந்த அளவுக்கு யோகம் எதிர்மறையாகச் செயல்படும். எதிரி கடன் வைத்தியச் செலவு களவு திருட்டு ஏமாற்றம் இழப்புகள் ஏற்படலாம்.

உடல்நிலையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்

வைத்தியச் செலவுகள் அடிக்கடி ஏற்படும்

வேலைகளில் மாற்றங்கள் ஏற்படும் (இட மாற்றம்/ வேலை மாற்றம்)

இருக்கும் வேலைகளில் கடுமை இருந்து கொண்டே இருக்கும் பல பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்

வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும் இருந்தாலும் கடுமையான போக்கு இருந்து கொண்டே இருக்கும்

புதிய கௌரவப் பதவிகள் கிடைக்கும் அதனால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது

மருத்துவமனையில் உள்ளவர்கள் பரிபூரண குணம் அடைய வாய்ப்புகள் ஏற்படும்

தண்டச் செலவுகள் கட்டுக்குள் வரும்

சுப விரயச் செலவுகள் ஏற்படும் ( கடன் வாங்கியும் செய்யக்கூடிய கட்டாய நிலை உண்டாகும்) அதாவது வீடு கட்டுதல் புதிய வண்டி வாகன வசதிகள் திருமண செலவுகள் புதிய முதலீடுகள் செய்தல்.

புதிய முதலீடுகள் செய்வதில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் தனியார் நிறுவனங்களில் அல்லது தனியார் நபர்களிடம் முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் தேவைக்கேற்ப தனவரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்

எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும்.

குடும்பத்தில் இருந்த பிணக்குகள் சரியாகும்

வரன் பேச்சுவார்த்தைகள் நடக்கும். வரன் முடிவாகும். திருமணம் நடந்தேறும்.

அடிக்கடி விருந்தினர் வருகை உண்டு அதனால் செலவுகளும் ஏற்படும்.

கட்டுக்கடங்காத விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வெளிநாடு பயணங்கள் அமையும். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அடிக்கடி வெளிநாடு பயணங்கள் உண்டாகும்

பண விஷயங்களில் மிக மிக எச்சரிக்கையாக அவசியம்.

நகை பணம் களவு போக வாய்ப்பு உண்டு அல்லது தொலைந்து போக வாய்ப்பு உண்டு எனவே எச்சரிக்கை அவசியம்.

வாக்கு கொடுப்பது ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்.

எதிரிகள் பிரச்சனைகள் அதிகரிக்கும்

வங்கிகளில் பண நடவடிக்கைகளில் செயல்படும்போது மிகுந்த கவனம் தேவை

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
அந்தணர்களுக்கு வேண்டிய உதவிகள்
ஒருமுறை யானைக்கு கரும்பு கட்டு வாங்கித்தர பல பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் அல்லது கோவிலில் ஒரு நாள் ஆகாரத்துக்கு பணம் கட்டினால் சிறப்பு

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More