2019 புத்தாண்டு பலன்கள் மகர ராசி – New year Rasi Palan 2019 Makara Rasi

Puthandu rasi palan 2019 Makara Rasi - New Year Rasi palan Mahara Rasi 2019 in Tamil

2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் மகர ராசி

(New Year Rasi Palan 2019 Makara Rasi – Puthandu Rasi Palan Makara Rasi 2019 in Tamil)

ராகு_கேது பெயர்ச்சி பலன்கள் மகர ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Makara Rasi)

மகர ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???

 

2019 ஆண்டில் குரு பகவான் 11லும், சனி பன்னிரண்டாம் பாவத்திலும், ராகு கேதுக்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு 6 மிடத்திற்கும்,12 மிடத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றார்கள். 2019 ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்று பார்ப்போமா???

“மன்னவன் பதினொன்றில்
ஒரு மன்னர் சேவை
வாகனங்கள் உள்ளோன்
அன்றும் பொன் ,பொருள்
சேரும் தாயே”

குருபகவான் பதினொன்றில் இருந்து உங்களுக்கு சாதகமான பலன்களை தந்து கொண்டு உள்ளார். வாகனம் வாங்கக்கூடிய யோகமும், லட்சுமி கடாட்சத்தால் பொன், பொருள் சேர்க்கையும், அரசாங்க உதவியும்,
பெரிய மனிதர்கள் சப்போர்ட் கிடைக்கும்.
குருபகவான் பதினொன்றில் இருந்து ஐந்தை பார்ப்பதால் தெய்வ கடாட்சத்தால் நன்மைகளும், காசி,ராமேஸ்வரம் போன்ற புனித பயணங்கள், மேற்கொண்டு அதனால் சுபவிரையங்கள் ஏற்படும். தான் பெற்ற மக்களாலும் நன்மைகள் இருக்கும்.

குருபகவான் மூன்றை பார்ப்பதால் சகோதர வகையில் நன்மைகளும், சகோதரர்களுக்குள் ஏதேனும் மனஸ்தாபம் இருந்திருந்தால் ,கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் அனைவரும் ஒன்று கூடி ,கருத்து வேற்றுமைகள் மறையக்கூடிய ஆண்டு 2019. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே”
என்ற வாக்கிற்கு இணங்க சகோதர ஒற்றுமை பலப்படும் ஆண்டு 2019.
குருவின் பார்வை பலத்தால் எடுத்த காரியத்தை ஈசியாக முடிப்பீர்கள்.
காரிய வெற்றிகளும், சகாயங்களும் ஏற்படக்கூடிய ஆண்டு 2019.

குருபகவான் ஏழை பார்ப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியங்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணம் ,காதுகுத்து, வளைகாப்பு,திரட்டி போன்ற சுபகாரியங்கள் வீட்டில் நடக்கப்போகும் ஆண்டு 2019. ஏழரைச்சனியால் குடும்பத்தில் பிரச்னைகள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் குடும்பம் பிரியாது.

ஆனாலும் ஏழரைச்சனி நடந்து கொண்டு உள்ளதை மறந்து விடக்கூடாது.25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல்சுற்றாகவும்(மங்கு சனி),35 வயது மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது சுற்றாகவும் (பொங்கு சனி),, 55 வயது மேற்பட்டவர்களுக்கு (மரணச்சனி) நடந்து கொண்டு உள்ளது.

“யானை வரும் பின்னே: மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கேற்ப வருமானம் வருவதற்கு முன்பே செலவுகளும் முன்னாடியே காத்து கொண்டு இருக்கும். ஆனால் என்ன?? முன்னாடியெல்லாம் வருமானம் இல்லாமல் செலவை கொடுத்து வந்தார் சனிபகவான். இந்த 2019 ல் குருபகவான் வருமானத்தை கொடுத்து பின் விரையங்களை தருவார். விரையங்கள் சனியால் இருக்கும்.

எந்த ஒரு தசைக்குமே ஏழரைச்சனி என்பது ஒரு வேதைஅமைப்பு என்பதால்
தசாநாதன் கொடுப்பதை சனி தடுப்பார்.
கைக்கு வர்றத வரவிடாமல் பண்ணுவார். நஷ்டங்கள் அனேகம் பண்ணுவார்.
100 ரூபாய் வருமானம் வரவேண்டிய இடத்தில் 50 ரூபாய் தான் வருமானம் வரும். பொதுவாக ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் ராகுதசை, சந்திரதசை,சனிபுக்தி போன்றவை ஒரே சமயத்தில் நடக்கும் போது குடும்பத்தில் வறுமை,துன்பம், தொல்லை ,கஷ்டங்கள் இருந்தே தீரும்.

தன் தசையில் தன்புக்தி நடப்பவர்களுக்கு நிச்சயம் கெடுதலான பலன்கள் நடைபெறும். ஏன்னா சுயபுக்தி காலத்தில் மத்திமமான பலன்கள் நடக்கும். கோட்சாரப்படி பலன்கள் நடைபெறும். ஏழரைச்சனி காலம் என்பதால் ஏமாற்றங்கள் உண்டாகும். ஆசை காட்டி மோசம் செய்யும். லாபம் வர்ற மாதிரி காமிச்சு நஷ்டத்தை பண்ணும்.

புதியதாக எதையும் ஆரம்பிக்க வேண்டாம். மூலதனம் போய்டும். தொழிலில் லாபம் கம்மியா இருக்கும். சிலருக்கு தசாபுக்திகள் சரியில்லை என்றால் பதவி பறி போய்விடும். மேமோ கொடுக்கறது,டிஸ்மிஸ், வேலைப்பளு,மேலதிகாரியோடு மோதல் போக்கு போன்றவை நிச்சயமாக உண்டு.வெளிநாடு செல்பவர்களுக்கு சாதகமான ஆண்டாக 2019 இருக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் சாதகமான ஆண்டாக இருக்கும்

சனிபகவான் தன்னுடைய மூன்றாம் பார்வையால் தனம், குடும்பம்,வாக்கு ஸ்தானத்தை பார்த்து விடுவதால் இந்த ராசியை சேர்ந்த சிலருக்கு குடும்பம் அமைந்துவிடும். குருவும் சனியும் தாராள பணவரவுகளை தந்து கொண்டு உள்ளனர். இருந்தாலும் விரையச்சனியால் செலவுகள் அதிகரிக்கும். இறைவன் அனுக்கிரகத்தால் செலவுகளுக்கு ஏற்ற வருமானமும் வந்து விடும். அதற்காக நாம் ஆண்டவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொங்கு சனியாக வருவதால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. ஆனால் 35 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு நிச்சயம் ஏழரைச்சனியால் பாதிப்புகள் இருக்கும். அது எதிர்காலத்துக்கு தேவையான படிப்பினைகளை தரவல்லதாக இருக்கும். வாழ்க்கை பாடங்களை கற்று தரும். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் மாதிரி. மேலே இருப்பவன் கீழேயும், கீழே இருப்பவன் மேலேயும் வருவது இயற்கை. ஏழரைச்சனி தலைக்கணத்தை,அகம்பாவத்தை,ஆணவத்தை அழித்து புதிய மனிதனாக அவனை மாற்றும்.

இந்த ஏழரைச்சனியில் அகம்பாவம் கூடாது. எதிலும் அகலக்கால் வைக்க கூடாது. பேராசை படக்கூடாது. இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க கூடாது. சிறை,அல்லது ஜென்மம் என்று சொல்லுவார்கள். தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது. அது எதிர்காலத்தில் பிரச்னைகளை தரும்.
ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும். எது எப்படி இருந்தாலும் குருவின் பலத்தால் ,குருபலத்தால் வரக்கூடிய அத்துனை பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019

இதுவரை உங்கள் ராசியிலே இருந்த கேதுபகவான் ஞானத்தை மட்டுமே அளித்து வந்தார். 2018 ல் உங்கள் ராசியிலே கிரகணம் வேறு நடந்ததால் சிலர் கடுமையான மனக்குழப்பங்களுக்கு ஆளாகி ,இந்த ஊரிலே இருக்கலாமா?அல்லது வேறு ஊருக்கு ஓடிப்போலாமா??என்று கூட யோசித்து இருப்பீர்கள்.

இன்னும் சிலரோ கடன்காரன்களுக்கு பயந்து ,செல்போன் அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிம்மை மாற்றி இருப்பீர்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய் தொல்லைகளாலும்,50 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு கடுமையான அலைச்சல்களையும், ராகு கேதுக்கள் தந்திருப்பார்கள். சிலருக்கு பாம்புகள் நேரிலும், கனவிலும் தட்டுப்பட்டிருக்கும்.
சிலருக்கு ஒன்று, ஏழில் இருக்கும் ராகு,கேதுக்கள் திருமணத்தடைகளை கொடுத்து இருப்பார்கள்.

ஆனால் 2019 மார்ச் மாதத்தில் இருந்து உங்களுக்கு இந்த நிலைமைகள் மாறி,
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்து விடும். கடன் பிரச்னைகள் குறையும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நோய் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். பொதுவாக பாவர்கள்6,12 ல் மறைந்து பலனை தரவேண்டும்.

ராகு மார்ச் மாதத்திற்கு பிறகு அனுகூலமாக உள்ளார். தம்பதிகளுக்குள் ஒற்றுமை கூடும்.இதுவரை கடுமையான அலைச்சல்களை தந்த பாம்புகள் இனி வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு, பாராட்டு, பதவி,உற்சாகம் ,மேலிடத்து ஆதரவு போன்ற நல்ல பலன்களை தருவார். உங்களுக்கு ராகு,கேது,குரு சாதகமான பலனை தந்து கொண்டு உள்ளனர்.

கேதுபகவான் பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து உங்களுக்கு விரயங்களை அதிகப்படுத்தினாலும் ,வெளிநாட்டு பயணங்களை தந்து லட்சக்கணக்கான சம்பாத்யங்களை தருவார். வெளிநாட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து கதவைதட்டும்.வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்…கேதுபகவான் பன்னிரண்டாம் பாவத்தில் சுபத்தன்மை பெற்று இருந்தால் இந்த பிறவியே கடைசிபிறவியாகும். பன்னிரண்டாம் இடம் என்பது அயன,சயன போகஸ்தானம் என்று அழைக்கப்படும்.
இது தூக்கத்தை பற்றி குறிப்பிடுவதால் ,பன்னிரண்டாம் பாவத்தில் அதிகமான பாவக்கிரகங்கள் சம்பந்தப்படுவதால் தூக்கம் கெடும்.

மாணவ மாணவிகள் நன்கு படிப்பர்.விவசாயிகளுக்கு லாபம் மிகுந்து காணப்படும். அரசியல் வாதிகளுக்கு பதவி ,பாராட்டு கிடைக்கபெறும். பொதுவாக அனைத்து தரப்பு மக்களுக்கும் 2019 புத்தாண்டு திருவருளாலும்,குருவருளாலும் நன்மைகள் மட்டுமே நடக்க கூடிய ஆண்டாக நிச்சயம் இருக்கப்போகின்றது.

நன்றி

வணக்கம்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More