கடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022

1,634

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இந்த கிரக பெயர்ச்சி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.

இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.

  • உங்கள் ராசிக்கு ஆசை அபிலாசை, லாபம் என்று சொல்லக்கூடிய 11-ஆம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்
  • பண வரவுகள் அதிகரிக்கும் லாபங்கள் அதிகரிக்கும்
  • பங்குசந்தைகளில்/ உழைக்காத பணம் கைக்கு வந்து சேரும்
  • கடன்கள் முழுமையாக அடைபடும்
  • நீங்கள் எதிர்பார்த்த அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும்
  • நீண்ட கால ஆசை அபிலாசைகளை பூர்த்தி ஆகும்
  • பூர்வீகத்தில் தாத்தா வழி சொத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் அதன்மூலம் ஆதாயங்கள் வந்து சேரும்
  • பிரிந்திருந்த மூத்தவர்கள் / சகோதரர்கள் ஒன்று சேரும் காலகட்டம்
  • புதிய வீடு வண்டி வாகன வசதிகள் ஏற்படும்
  • அடுத்த ஒன்றரை வருடம் மிக மிக அதிர்ஷ்டமான காலகட்டம்
  • புதிய வேலைவாய்ப்புக்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமையும்
  • உங்கள் ராசிக்கு குழந்தை, பூர்வீகம், மனம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பஞ்சம ஸ்தானத்தில் கேது பகவான் பெயர்ச்சியாகிறார்
  • மனம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும்
  • குழந்தை பாக்கியம் தடைபடும்
  • பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள் உண்டாகும்
  • வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும் ஆகையால் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்
  • பாலிடெக்னிக் டெக்னிகல் சார்ந்த துறைகளில் படிப்பவர்கள் படிப்புகளில் தடை தாமதங்கள் உண்டாகும்
  • பூர்வீகத்தில் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
  • புனித தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும் தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்
  • நீண்டநாள் குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வம் தெரியவரும்
  • குளம் குட்டைகளில் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம்
  • மாற்று மதத்தினரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
  • முதலீடுகள் செய்வதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்

பரிகாரம் :

  • குலதெய்வ வழிபாடு, கருப்பண்ணசாமி, அய்யனார் வழிபாடு செய்ய சிறப்பு
  • யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
  • முன்னோர்கள் வழிபாடு
  • மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
  • எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More