கும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.
இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.
ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.
உங்கள் ராசிக்கு நிலம் வீடு வண்டி வாகனம் சுகஸ்தானம் என்று சொல்லக்கூடிய நான்காம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
- மாணவ மாணவியர்கள் மேற்படிப்புகள் தொடர்வதில் சிக்கல்கள் ஏற்படும் விரும்பிய பட்டப் படிப்புகள் அமைவதில் தடை தாமதங்கள் உண்டாகும் கவனமாகவும் படிக்க வேண்டிய காலகட்டம்
- நிலபுலம் வீடு மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் சிக்கல்கள் உண்டாகும் பத்திரங்களை கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும்
- பழைய வண்டி வாகனங்களில் மிக மிக கவனமான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் புதிய வண்டி வாங்குவது சிறப்பு
- உடல்நலனில் கவனம் தேவை சுகம் கேடு உண்டாகும் இதய சம்பந்தப்பட்ட நோய்களில் கவனம் தேவை
- தாயார் வழியில் இழப்புகளை சந்திக்கும் காலகட்டம்
- சீட்டு கட்டுவதில், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்
உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானம் கர்ம ஸ்தானம் தலைமை ஸ்தானம் என்று சொல்லப்படும் 10-ஆம் இடத்திற்கு கேது பெயர்ச்சியாகிறார்
- வேலை தொழில் வியாபாரம் இவைகளில் கவனமாக இருக்க வேண்டும்
- வேலை இழப்புகள் தொழில் மாற்றங்கள் வியாபார மாற்றங்கள் நட்டங்கள் ஏற்படும் காலகட்டம்
- அரசு ஊழியர்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் பதவி உயர்வில் தடை தாமதங்கள் தேவையில்லாத தொந்தரவுகள் மேலதிகாரிகளின் தொந்தரவுகள் ஏற்படும் கால திட்டம்
- கௌரவ பாதிப்புகள் ஏற்படும்
- குழந்தை பாக்கிய தடைகள் உண்டாகும்
- தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
- பூர்வீகத்தில் பிரச்சனைகள் ஏற்படும்
- தந்தையாரின் உடல் நலம் தந்தையாருக்கு பணப் பிரச்சனைகள் ஏற்படும்
- எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம்
- தெய்வீக நாட்டங்கள் அதிகரிக்கும்
பரிகாரம் :
- குலதெய்வ, முன்னோர் வழிபாடு, குளக்கரையில் ராகு கேதுவுடன் உள்ள விநாயகப்பெருமான், நாகர் வழிபாடு செய்ய சிறப்பு
- யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
- மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
- எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்
Comments are closed.