துலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.
இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.
ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.
உங்கள் ராசிக்கு ஆயுள், மர்மம், திடீர் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று சொல்லக்கூடிய அட்டம அதாவது எட்டாமிடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
- திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும் காலகட்டம்
- உழைக்காத பணம் / எதிர்பாராத தனம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு
- மர்ம உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும்
- விஷ சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
- வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்
- வெளிநாடு வேலை வாய்ப்புகள் அமையும்
- மாற்று மதத்தவர்களின் தொந்தரவுகள் ஏற்படும் காலகட்டம்
- மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்
- திடீர் திருப்பங்கள் ஏற்படும்
- மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனம் தேவை
- மறைமுக பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய காலகட்டம்
- நிதி நிறுவனங்களில் / சீட்டு தொகைகளில் கவனமாக இருக்க வேண்டும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடுகளை செய்ய வேண்டாம்
- தேவையற்ற முதலீடுகளை தவிர்க்க வேண்டிய காலகட்டம்
- தூக்கம் கெடும், துர் கனவுகள் அடிக்கடி ஏற்படும்
உங்கள் ராசிக்கு வாக்கு குடும்பம் தனம் எனப்படும் இரண்டாம் இடத்திற்கு கேது பகவான் பெயர்ச்சியாகிறார்.
- பண விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் அதிக ரொக்கம் கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை
- வாக்கு கொடுப்பதை / கையெழுத்து / ஜாமீன் / தேவையற்ற ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவது தவிர்க்க வேண்டும்
- கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் இருக்க வேண்டும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் அறுவை சிகிச்சை எடுக்கும் வாய்ப்பு ஏற்படும்
- விலை உயர்ந்த பொருட்கள் கையாளுவதில் கவனம் தேவை
- குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்
- திருமணம் தடை தாமதங்கள் ஏற்படும்
- ஆரம்பக் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு தடைகள் உண்டாகும் மிக மிக கவனமாக படிக்க வேண்டிய காலகட்டம்
- உணவில் கட்டுப்பாடு அவசியம் கையாளவேண்டிய காலகட்டம் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் விஷ சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு
பரிகாரம் :
- குலதெய்வ வழிபாடு, பாதாள விநாயகர், நாகர் வழிபாடு செய்ய சிறப்பு
- யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
- மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
- எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்
Comments are closed.