நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம், தை மாதம் 10ம் தேதியும்,ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.
29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.
இக்காலகட்டங்களில் கன்னி ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
கன்னி ராசிக்கு சனிபகவான் தற்போது 4ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
5ம் இடத்தில் தன் சொந்த வீட்டில், ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -7ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 2ம்இடத்தையும் பார்ப்பார்.
கன்னி ராசிக்கு இதுநாள் வரை இருந்த அர்தாஷ்டம சனி விலகுவதே மிகப்பெரிய ஆறுதல் தான்.
நாலாம் இடமான வீடு, மனை, வண்டி வாகனம் மற்றும் சுக ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இவை அனைத்தையும் பாதித்திருப்பார்.
தற்போது பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சியாகும் சனி நல்ல பலன்களை தர இருக்கிறார்.
தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்களை தாராளமாக தொடங்கலாம். வாராக் கடன்கள் வசூலாகும்.
குருவின் பார்வையும் தற்போது பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பதிவதால் தொழிலில் இதுநாள்வரை இருந்த முட்டுக்கட்டைகள் விலகும்.
விரும்பிய இடத்திற்கு பதவி உயர்வுடன் பணிமாற்றம் கிடைக்கும்.
வேலையில் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவார் அல்லது நீங்கள் மாறும் நிலை ஏற்படும் .அந்த மாற்றம் நல்ல அமைப்பாகவே இருக்கும்.
கன்னி ராசியை பொறுத்தவரை இனி கண்டிப்பாக இறக்கம் இல்லை. ஏற்றம் மட்டுமே. வருஷக் கடைசியில் குருவும் பஞ்சம ஸ்தானத்தில் நீசபங்கம் ஆவதும் நல்ல அமைப்பே.
வெளிநாடு வேலைக்கு செல்வோர் தாராளமாக முயற்சி செய்யலாம்.
சனி மூன்றாம் பார்வையால் ஏழாம் இடத்தை பார்ப்பதால் கூட்டுத்தொழில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
இதுநாள்வரை தடைப்பட்ட திருமணங்கள் சீரும் சிறப்புமாக நடந்தேறும்.
4-ஆம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்து உடல்நிலையை பாதித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்போது முற்றிலுமாக விலகுவதால் உடல்நிலை முற்றிலும் சீராகும். அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்து அல்லல்பட்ட அவதி நிலை மாறும்.
நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வீடு, வண்டி ,வாகனம் வாங்க கூடிய யோக காலம் இது.
வீடு கட்ட நினைப்பவர்கள் தாராளமாக ஆரம்பிக்கலாம்.
அடிக்கடி செலவு வைத்துக்கொண்டிருந்த வண்டி, வாகனங்கள் இனி அந்த தொல்லையை தராது. புது வகை வாகனம் கிடைக்கும்.
சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
தொழில் நன்றாக நடந்தாலும், சேமிப்பும் பெரிய அளவில் இருக்காது. வரவிற்கும் செலவிற்கும் ஏற்ற அளவில் பணவரவு உண்டு.
கல்லூரியில் படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக பணி கிடைக்கும்.
2021 ஆம் ஆண்டு பதவி உயர்வு போன்றவை எதிர்பார்க்கலாம்.
குடும்பத் தலைவிகளின் வாழ்க்கை சீராக செல்லும்.
சிலருக்கு காதல் கனிந்து கல்யாணத்தில் முடியும்.
எப்படிப் பார்த்தாலும் கன்னிராசிக்கு கவலைகள் பெரிய அளவில் இனி இருக்காது.
நேற்றைய நாளைவிட இன்றைய நாளில் கண்டிப்பாக வளர்ச்சியே. வளர்ச்சி ஒவ்வொரு நாளும் கூடிகொண்டே செல்லும்.
சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.
சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.
இந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 01. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும். டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.
சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து, சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.
சனியின் வக்ர காலங்கள்:
11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் எல்லா வகையிலும் எச்சரிக்கை தேவை.
குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலத்தில் கவனம் தேவை.
சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன், பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :
7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை
சனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.
கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.
சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்:
உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும். வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.
வீட்டில் மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் படத்தை வைத்து புதன்கிழமை தோறும், புதன் ஹோரையில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவது, வாழ்க்கையில் அல்லல்கள் பல தீர்க்கும். வசந்தத்தை கொண்டுவரும்.
இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.
ஓம் நமசிவாய