கும்பம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020

5,481

நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம் ,தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.

29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.

இக்காலகட்டங்களில் கும்பராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

கும்ப ராசிக்கு சனிபகவான் தற்போது
11ம் இடத்தில் இருந்து 12ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

12ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -2ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 9ம்இடத்தையும் பார்ப்பார்.

கும்ப ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பிக்கிறது என்று பீதியடைய வேண்டாம்.

சில வழி முறைகளை கையாண்டால் ஏழரைச் சனியை எளிதாக எதிர்கொள்ளலாம்.

ஏழரை சனியில் தற்போது விரய சனி ஆரம்பிக்கிறது என்பதால் விரயங்களை கொடுக்கும் .அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.

கையில் இருக்கும் பணம், காசுகளை தொழில்துறையில் முதலீடு செய்யாமல் அதை சுப முதலீடுகளாக மாற்றிக்கொள்வது நல்லது.

கையிலிருக்கும் பணத்தை காலி மனையாக வாங்கிப் போடலாம். ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை வெளியே எடுக்க முடியாதபடி பாதுகாப்பாக சேமித்து வைக்கலாம்.

வீட்டில் இருக்கும் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது.

கையில் இருக்கும் பணத்தினை புதிய தொழில் துறையிலோ, அல்லது லாபம் வரும் துறையிலோ இப்பொழுது முதலீடு செய்வது கூடாது.

Death investment எனப்படும் காலி மனையில் அல்லது fixed deposit ல் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

சிலருக்கு இடமாற்றம் ,தொழில் மாற்றம் ஏற்படும் என்பதால் விரைத்துக்கொண்டு புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

செய்யும் தொழிலை தாராளமாக செய்யலாம். ஆனால் முதலீடுகளை அளவோடு செய்து கொள்வது நல்லது. புதிய கிளைகள் தொடங்குவது கண்டிப்பாக கூடாது.

கொடுக்கல்-வாங்கலில் அளவுடன் கொடுத்து வாங்கிக் கொள்வது நல்லது.

சிலருக்கு நெருங்கிய உறவில் அதிருப்தியோ அல்லது பிரிவோ ஏற்படலாம்.

மாணவர்கள் கவனமுடன் படிக்கும் காலம் இது.

விரும்பத்தகாத விருப்பங்கள் வந்து சேரும் காலம் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்து சரியான தசாபுக்திகள் நடந்தால் காதல் கனியும் .அதனால் சில பிரச்சினைகளும் உண்டாகும்.

சிலருக்கு கருத்து வேறுபாடுகள் குடும்பத்திற்குள் ஏற்படும்.

உடல்நிலையில் அக்கறையாக இருப்பது நல்லது.

எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். பணம் நிறைய வச்சிருக்கீங்க என்றால் தாராளமாக ஜாமீன் போடுங்க.

குடும்ப உறவுகள் பற்றியும் ,நண்பர்கள் பற்றியும், உண்மையான உறவுகளை காட்டிக்கொடுக்கும் காலம் இது.

வண்டி வாகனங்களில் இரவு நேர பயணத்தையும் ,வேகமாக செல்வதையும் தவிர்க்கவும்.

மது, மாது ,சூது இவற்றில் கவனமுடனிருப்பது நல்லது. இல்லாவிட்டால் இவற்றால் அவமானப்பட கூடிய நிலை ஏற்படும்.

உங்கள் சுய ஜாதகத்தில் தசாபுக்திகள் சரியில்லை என்றால் சிலருக்கு பொருளாதார நெருக்கடி , கோர்ட் கேஸ் என்று அலைய நேரிடும்.

யார் மீதும் பெரிய அளவில் நம்பிக்கை வைக்க வேண்டாம்.

இறைவனை மட்டும் சரணாகதி ஆக பிடித்துக்கொள்ளுங்கள்.

சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.

சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.

இந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 23. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும்.டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.

சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து,சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.

சனியின் வக்ர காலங்கள்:

11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் நல்ல மாற்றங்கள் உண்டு.

குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலம் மேம்படும்.

சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன்,பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :

7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை

சனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.

கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் . வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

சனிக்கிழமை காலை சனி ஹோரையில் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யவும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.

ஓம் நமசிவாய

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More