சிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020

2,073

நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம் ,தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.

29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.

இக்காலகட்டங்களில் சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

சிம்மராசிக்கு சனிபகவான் தற்போது 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

6ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் , ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -8ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 3ம்இடத்தையும் பார்ப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் மிக நல்ல அபரிமிதமான பலன்களை அடையப்போகும் முதல்தர ராசி சிம்ம ராசியே.

இருள்நீங்கி கிழக்கே சூரியன் உதிப்பது போல உங்கள் வாழ்வில் இதுநாள்வரை சூழ்ந்திருந்த துன்பங்கள் எனும் கருமேகங்கள் விலகி, சூரியன் சுடர்விட்டு பிரகாசிக்க தொடங்கியது போல் வாழ்க்கை ஒளிரும்.

இனி சிம்மம் சிலித்தெழுந்து சீறிப்பாயும்.

கோச்சாரத்தில் ஆறாம் இடத்தில் சனி, ஐந்தாம் இடத்தில் குரு, லாப ஸ்தானத்தில் ராகு என மூன்று பெரிய ராஜ கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளன.

இது போன்ற அமைப்பு இன்னும் சில வருடங்களுக்கு இல்லை என்பதால் இக்காலம் உங்களுக்கு பொற்காலமாக அமையும்.

உங்கள் சுய ஜாதகம் மிக யோகமாக இருக்கும் பட்சத்தில் எண்ணிய எண்ணம் அனைத்தும் ஈடேறும்.

சூரியனின் ஆதிக்கத்தைப் பெற்ற சிம்மராசிக்காரர்கள் எதிலும் தனித்துவமாக விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

தற்போது அதற்கான கிரகநிலைகள் மிக அருமையாக உள்ளது.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கூடும். புதிய தொழில் தாராளமாக துவங்கலாம்.

பணி உயர்வு, பதவி உயர்வு போனஸ் இன்கிரிமெண்ட் என அனைத்தும் கைகூட பெரும் காலம் இது.

மாணவர்கள் சிறப்பாக கல்வியில் தேர்ச்சி பெறுவர். சிலருக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் ரேங்க் பெரும் யோகமுண்டு.

நினைத்த கல்லூரியில், நினைத்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

சிலருக்கு ஏற்கனவே தடைப்பட்டிருந்த பாடங்களைப் படித்து ,நல்ல முறையில் தேர்ச்சி பெறுவர்.

திருமண வயது உடையவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆகும். திருமணமாகி ஒரு வருடத்தில் குழந்தையையும் எதிர்பார்க்கலாம்.

அரசியலில் இருப்பவர்களுக்கு புது பதவிகள் கிடைக்கப்பெறும்.

அரசாங்கத்தில் டெண்டர் போன்றவற்றிற்கு அப்ளை செய்து உள்ளவர்களுக்கு அது நல்ல முறையில் கிடைக்கும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் சிம்மராசியினருக்கு, பதவிகள் கிடைக்கப் பெறும். ( உங்கள் சுய ஜாதகம் யோகமாக இருக்கும் பட்சத்தில்)

கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு மொத்த கடனும் முழுமையாக அடையும் காலம் இது.

உடல் நலம் சீராக இருக்கும் .

எந்த தொழில் செய்தாலும் பெரிய அளவில் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் தாராளமாக செய்யலாம். வேலை கிடைக்கும்.

கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி கருத்தொற்றுமையான இனிமையான வாழ்வு அமையும்.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனின் எண்ணம் அனைத்தும் ஈடேற கூடிய காலமாக இக்காலம் இருக்கிறது. நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் இனி ஜெயமே.

சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.

சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.

இந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 01. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும். டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.

சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து, சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன் – மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.

சனியின் வக்ர காலங்கள்:

11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் எல்லா வகையிலும் எச்சரிக்கை தேவை.

சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன், பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :

7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை

சனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.

கொடுக்கல் – வாங்கலில் எச்சரிக்கை தேவை.

சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

இதைப்படிக்கும் கடக ராசி அன்பர்கள் உங்கள் கடந்த கால அனுபவங்களை கமெண்ட்டுகளாக பதிவிடுங்கள்.

பரிகாரம்:

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும். வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை திருச்செந்தூர், திருப்பதி, திருவண்ணாமலை சென்று வரவும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.

ஓம் நமசிவாய

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More