Forum

Please or Register to create posts and topics.

கிரகங்களின் பார்வை பலம் (திருஷ்டி பலம்)

கிரகங்களுக்கு பார்வை பலம் உண்டு. குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 7, 5, 9 ம் இடங்களை பார்ப்பார்.

செவ்வாய் தான் இருக்கும் இடத்தில் இருந்து 4, 7, 8 ஐ பார்ப்பார். சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ம்இடங்களை பார்ப்பார். மற்ற கிரகங்கள் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பார்கள். ராகு கேதுக்களுக்கு பார்வை இல்லை.

"கோலவிளங்கதிர் கண்ட
பனிப்போல் தேயுமே
குரு, சுக்கிரன், புதன், வெள்ளி நோக்கால்
குற்றம் எல்லாம் தானே"

குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும். சுக்கிரன் லட்சம் தோசங்களை நிவர்த்தி செய்வார். புதன் நூற்றுக்கணக்கான தோசங்களை நிவர்த்தி செய்வார்.

இப்போது இந்த கிரகங்களின் பார்வையை அதாவது திருஷ்டியை வைத்து எப்படி பலன் எடுப்பது என்று பார்ப்போம்?

முதலில் லக்ன, ராசியை குரு பார்ப்பது யோகம். ஒரு யோகமான ஜாதகத்தில் குரு லக்னத்தையோ ராசியையோ பார்த்து இருப்பார். விதி, மதி, கதி இந்த மூன்றையும் குரு பார்ப்பது ரொம்பவே சிறப்பானது.

லக்னாதிபதி கெட்டு போனாலும் லக்னத்தை குரு பார்த்தாலே கூட போதும். அந்த ஜாதகர் ஓரளவுக்கு பலத்தை அடைவார். ஓரளவுக்கு கஷ்டப்படாமல் வாழ்க்கையை அடைவார். இப்ப உதாரணமாக ஒருவர் தனுசு லக்னம் என்று கொள்வோம். குருபகவான் சிம்மத்தில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் லக்னத்தை பார்க்கிறார். மிதுனத்தில் இருந்து புதனும், சுக்கிரனும் ஏழாம் பார்வையாக தனுசு லக்னத்தை பார்க்கிறார். பௌர்ணமி க்கு அருகில் இருக்கும் சந்திரன் தனுசு லக்னத்திலே இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் நிலை எப்படி இருக்கும்? நண்பர்களே?

நிச்சயமாக உயர்ந்த இடத்தில் இருப்பார். பிறக்கும்போதே உயர்ந்த நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறந்து இருப்பார். வசதியான வீட்டில் பிறந்து சகல வசதிகளையும் அனுபவிப்பார். சொந்த வீடு, வாகனம், கார் , நல்ல பதவி நிச்சயமாக அடைந்தே தீருவார். அய்யா. இவருக்கு சுக்கிரன் தசையே நடப்பதாக கொண்டால் கூட இவர் நிலை கீழே நிச்சயமாக இறங்கி விடாது. தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் தசை நல்ல பலன்களை செய்ய மாட்டார். ஆனால் குறிப்பிட்ட இந்த ஜாதகரை மட்டும் சுக்கிரனால் ஒன்றும் செய்ய இயலாது.

காரணம் என்ன என்று சிந்தித்தீர்களே ஆனால் லக்னம் அதிபலம் பெற்று விட்டது. லக்னத்தை லக்னாதிபதி பார்த்து விட்டார். இன்னும் இரண்டு சுபக்கிரகங்களான சுக்கிரனும், புதனும் பார்த்து விட்டார்கள். பௌர்ணமி க்கு அருகில் இருக்கும் சந்திரன் வேறு லக்னத்திலே இருக்கிறார். நான்கு முக்கிய சுப கிரகங்களும் லக்னத்தோடு, ராசியோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் இவர் பெரிய அதிர்ஷ்டசாலி.

இது ஏதோ கற்பனை என்று எண்ண வேண்டாம் நண்பர்களே. இதையெல்லாம் நான் பல ஜாதகங்களில் பார்த்த திருஷ்டி பலன்கள். தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் தசையில் ஒருவர் நன்றாக இருக்கிறார் என்றால் இந்த மாதிரியான இணைவு கண்டிப்பாக அவர் ஜாதகத்தில் இருக்கும்.

இன்று ஒரு ஜாதகம் பார்த்தேன். கடக லக்னம். ஏழில் சந்திரன். லக்னாதிபதி லக்னத்தை பார்க்கிறார். அதிர்ஷ்டமான ஜாதகமே. குரு பன்னிரண்டில் இருந்து தசையை நடத்துகிறார். குரு பன்னிரண்டில் இருந்து நான்காம் இடமான துலாத்தை திருஷ்டிக்கிறார். அதாவது பார்க்கிறார். சுக்கிரன் பத்தில் இருந்து தன்னுடைய வீடான நான்காம் வீட்டை பார்க்கிறார்.

நான்காம் வீடான துலாத்திற்கு குருவின் பார்வையும், சுக்கிரன் பார்வையும் விழுகிறது இல்லையா? இங்கே ஒரு விதி சொல்லிவிடுகிறேன். எந்த கிரகமுமே தன் வீட்டை தானே பார்த்தால் அந்த வீடு வலுப்பெற்று விடும். இதில் இன்னொரு திருத்தம். பாவகிரகங்கள் சுபத்தன்மை பெற்று தன் வீட்டை தானே பார்க்க வேண்டும். குருவும், சுக்கிரனும் நான்காம் வீட்டை பார்ப்பதால் நான்காம் வீடு அதிபலம் பெற்று விடுகிறது.

இப்ப மேட்டர் என்னன்னா? நான்காம் வீடு அதிபலம் பெற்ற காரணத்தால் இவர் பட்ட படிப்பு முடித்து விட்டார். தாயார் நன்றாக உள்ளார். இப்போது தான் பல லட்சங்களில் நல்ல ஆடம்பரமான வசதியான வீடு கட்டினார்கள். கோயம்புத்தூரில் நிறைய இடம் வாங்கி போட்டிருக்கிறார்கள். பையன் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான். ஏன்?

லக்னாதிபதி லக்னத்தை பார்த்த ஜாதகம். டேக்ஸ்க்காக கடன் வாங்கி இன்னும் இரண்டு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

இப்ப என்னோட ஜாதகத்திற்கு வந்து விடுவோம். நான் மிதுன லக்னம். ரிஷப ராசி. எனக்கு இரண்டில் குரு உச்சம். பன்னிரண்டாம் பாவத்தில் சந்திரன் மூலத்திரிகோணம். நீங்கள் உச்சம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு புரியும். இப்ப எனக்கு குரு தசையில் சந்திரன் புக்தி போய்க்கொண்டு இருக்கிறது. என்ன நடக்கும்?

குருபகவான் இரண்டில் உச்சம் பெற்று தனது ஐந்தாம் பார்வையால் ஆறாம் இடத்தை பார்ப்பாரா? பன்னிரண்டாம் பாவத்தில் சந்திரன் உச்சத்தில் இருந்து

ஆறாம் வீட்டை பார்ப்பாரா? என்ன நடக்கும்? ஆறாம் இடத்தை இரண்டு உச்ச கிரகங்கள் பார்த்து ஆறாம் இடம் வலுத்து விட்டது. கடன், நோய், எதிரி வலுத்து விட்டது. இந்த பதினொரு வருட காலங்களும் எனக்கு கடன் இருந்து கொண்டு தான் இருக்கிறது. என்னால் கடனை தீர்க்க முடியாது. ஒரு கடனை அடைந்தால் இன்னொரு கடன் ஏற்பட்டு விடும். நான் 30 வயது வரை மருத்துவமனை சென்றதில்லை. மருத்துவர் ஆலோசனை எனக்கு தேவைப்பட்டதில்லை. ஆனால் 30 வயதுக்கு பிறகு குருதசை வந்த பிறகு மாத்திரை சாப்பிடாத நாள் இல்லை. மருத்துவர் ஆலோசனை அடிக்கடி தேவைப்படுகிறது. என்ன காரணம்? பாதகாதிபதி தசை வேறு. ஆறாம் இடத்தை குரு உச்சம் பெற்று பார்த்து இருக்கிறார். இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்குதா?

பரிகாரத்தை நாம் ஜாதகத்தில் தான் தேடனும். எங்க தொலைச்சமோ அங்கதான தேடனும்‌. ஏதாவது பரிகாரம் இருக்குதா? ஆஹா இருக்கிறது.

லக்னாதிபதி வலுவாக இருக்கிறார். எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். நோ. பிராப்ளம். 45 வயதுக்கு மேல சனிதசை வரும். அதுவரை பொறுத்து தான் இருக்கனும். சனி தசையில் கடன் இருக்காது.

சரி எதற்காக கடன்? சுப கடன். திருமணம் செய்ய, , பிள்ளைகளை படிக்க வைக்க!! வீடு மராமத்து பண்ண , , வாகனம் வாங்க, கம்யூட்டர் வாங்க . நல்ல செலவா? கெட்ட செலவா என்று பார்க்க பன்னிரண்டாம் இடத்துக்கு போயிருங்க. பன்னிரண்டாம் பாவத்தை கொண்டு ஒருவருக்கு வரக்கூடிய செலவுகள் நல்ல செல்வா ?கெட்ட செலவா?என்று கணிக்க முடியும்.

நண்பர்களே. ராகு தசை வந்தபோதே எனக்கு ஜோதிடத்தின் மீது ஈடுபாடு வந்து விட்டது. அப்போது உங்களை போன்று நானும் ஜோதிட ஆர்வலன். என்னுடைய எதிர்கால பலனை தெரிந்து கொள்ளும் ஆவலில் பழனியில் உள்ள அகத்திய நாடி ஜோதிட நிலையத்துக்கு எனது நண்பருடன் சென்று துல்லிய காண்டம் பார்த்தோம்.

நண்பர்களே ஒரு நல்ல பலன்கள் கூட சொல்லவில்லை நண்பர்களே. உனக்கு குரு தசையில் கடன் இருக்கும். நோய் இருக்கும். விபத்து நடக்கும். இதெல்லாம் . வினைக்குற்றம். ஊழ்வினைக்குற்றம். கோள்குற்றம். என்று சொல்லி அதற்கு ஒரு பெரிய கதை. போன ஜென்மத்து கதை. ஒரு அகோரியின் கதை . போன ஜென்மத்தில நான் அகோரியா பிறந்தனாமா! நான் செய்த பாவங்களை எல்லாம் விளக்கி . பரிகாரமும் சொன்னது. நான் அப்போது அதை நம்பவில்லை. ஒவ்வொன்றாக நடக்கும் போதுதான் எல்லாமே உண்மை என்று புரிந்தது. அதுதான் குருவின் திருஷ்டி பலன். மற்றும் உச்ச பலன். நண்பர்களே.

நமக்கு கெடுதலான பலன்களை ஒரு ஜோதிடர் சொல்லும் போது நமது மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அது எனக்கும் இருந்தது.

பொதுவாகவே குரு நல்லது செய்யனுமு னா அவர் சுத்தமாக இருக்கனும். அவர் பிராமண கிரகம். கொடுக்கறதுல ரொம்ப சிக்கனம். அவர் நல்லது செய்யனுமுனா நல்ல ஆதிபத்தியம் வாங்கியிருக்கனும்.

நல்ல சாரம் வாங்கியிருக்கனும். முக்கியமாக தீட்டு படக்கூடாது. அதாவது ராகு, சனி, செவ்வாய் பார்வையோ சேர்க்கையோ கூடாது. கேந்திர ஆதிபத்திய தோசம் பெறக்கூடாது. கிரகண தோசத்தில் இருக்கக்கூடாது.

அஸ்தங்க தோசத்தில் இருக்கக்கூடாது. குரு சுத்தமாக இருக்கனும். அதனால தான் சொல்றது, , அவர் இருக்கும் இடத்தை காட்டிலும் , , அவருடைய பார்வை பலன் தான் வெகுசிறப்பு என்பது இப்போது உங்களுக்கு நான் சொல்லாமலே புரிந்திருக்கும். எந்த லக்னமாக இருந்தாலும் அவர் இயற்கை சுபர் என்பதால் அவர் பார்வைக்கு பலம் இருக்கத்தானே செய்கிறது.

அடேங்கப்பா தலை சுத்துதா? மிதுன , கன்னி லக்னத்திற்கு செவ்வாய் தசை மட்டும் அல்ல. குரு தசையும் வராதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.

விருச்சிகம் லக்னம். பன்னிரண்டாம் பாவத்தில் சுக்கிரன் ஆட்சி கூட புதன் . ராசியும் துலாம் ராசி. செவ்வாய் கன்னியில். இப்போது பன்னிரண்டாம் பாவத்தில் இருக்கும் சுக்கிரன், புதன், சந்திரன் ஆறைப்பார்ப்பார்கள் இல்லையா?

போதாக்குறைக்கு செவ்வாயும் கன்னியில் இருந்து தனது எட்டாம் பார்வையால் ஆறைப்பார்க்க
அந்த ஜாதகருக்கு எதிரிகள் அனேகம்.
நோய் தொல்லை வேறு படுத்தி எடுக்கிறது. இவர் ஒரு வக்கீல்.

இந்த ஆறாம் இடத்தை அட்டமாதிபதி பார்த்தால் என்ன ஆகும்? எதிரி விளங்க மாட்டான். எதிரி அவனே அழிந்து விடுவான். சரி இந்த ஆறாம் இடத்தில் கேது இருந்து , சனியும் செவ்வாயும் அந்த கேதுவையும், ஆறாம் இடத்தையும் பார்த்தால், , அரசாங்கமே இந்த ஜாதகன் மேல் வழக்கு தொடுத்தாலும் அரசாங்கமே தோற்றுப்போய் விடும். ஜாதகனுக்கே வெற்றி உண்டாகும். எதிரிகள் காணாப்பிணம் ஆகி விடுவார்கள். இவர்கள் கடன் வாங்கினால் கடனை திருப்பி செலுத்த தேவையில்லை. எந்த ஒரு பாவத்தையும் சனி , செவ்வாய் சேர்ந்து பார்த்தாலோ அல்லது வேறு வேறு இடங்களில் இருந்து பார்த்தாலோ அந்த இடம் விளங்காது. ஆறை பார்த்தாலோ ஆறு விளங்காது. கடன் , நோய், வம்பு, வழக்கு, சத்ரு கெடும். அப்ப கடன் இருக்காது. நோய் இருக்காது. எதிரி இருக்காது.

நான் பார்த்த அனுபவத்தில் சந்திரன் கும்பத்தில் ராகு சாரத்தில் நின்று , நீச செவ்வாயின் எட்டாம் பார்வையால் பார்க்கப்பட்டு, சனியின் மூன்றாம் பார்வையால் சந்திரன் பாதிக்கப்பட்டால் சந்திரன் என்ன ஆதிபத்தியம் வாங்கிறாரோ அந்த ஆதிபத்தியம் கண்டிப்பாக பாதிக்கப்படும். சந்திரன் இரண்டாம் அதிபதியாக வந்தால் சந்திரன் புக்தி, சந்திரன் தசை, சந்திரன் அந்தரம் இவற்றில் தனம், குடும்பம், இடது கண் கண்டிப்பாக பாதிக்கப்படும். இது நூற்றுக்கு நூறு சரியாக வரும். சந்திரனுக்கு இங்கே ராகு, செவ்வாய், சனி தொடர்பு.

(மிதுனம் லக்னம்) நண்பர்களே!!! செவ்வாய் தோஷம் என்று ஒன்று நீங்கள் கேள்வி பட்டிருக்கக்கூடும். அதாவது செவ்வாய் 2, 4, 7, 8, 12 போன்ற இடங்களில் இருந்தால் அது செவ்வாய் தோஷம். உயிர் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம். மூலநூல்கள் என்ன சொல்லுது அப்படினா அப்படியே சந்திரனுக்கும் பாக்கனும், சுக்கிரனுக்கும் பாக்கனும் அப்படினு சொல்லும்.

என் தகப்பனார் விதிக்கும், மதிக்கும், சுக்கிரனுக்கும் 2, 4, 7, 8, 12 இந்த இடங்களில் இருந்தால் செவ்வாய் இருந்தால் அது வலுத்த செவ்வாய் தோஷம் என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அதை நான் ஜாதகத்தில் பார்த்தும் இருக்கிறேன். மூன்றுக்குமே சில ஜாதகத்தில் செவ்வாய் மேற்படி இடங்களில் இருக்கும்.

இதற்கும் விதிவிலக்குகளும் இருக்கவே செய்கிறது. செவ்வாய் குருவின் வீட்டில் இருந்தாலோ, குருவோடு இணைந்து இருந்தாலோ , குரு செவ்வாயை பார்த்து இருந்தாலோ , செவ்வாய், ஆட்சி, உச்சம், நீசம் பெற்று இருந்தாலோ சுக்கிரனின் வீடுகளில் இருந்தாலோ சுக்கிரனின் இணைவு, பார்வை பெற்று இருந்தாலோ சந்திரனோடு சேர்க்கை பெற்று இருந்தாலோ, சந்திரன் செவ்வாயை பார்த்து இருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லை. விதிவிலக்கு பெறுகிறது. நண்பர்களே.

சிலசமயங்களில் செவ்வாய் குரு, சுக்கிரன், சந்திரனோடு இணைந்து குரு மங்கள யோகம், சந்திர மங்கள யோகம், பிருகு மங்கள யோகம் என்று பிரமாதமான பூமியோகங்களை தரும் போது இதையும் சிலர் தோசம் என்று சொல்லி பலபேர் வாழ்க்கையில் விளையாடுவதை என்னவென்று சொல்வது. திருமண புரொக்கர்கள் தான் இதில ரொம்ப விளையாடுகிறார் கள். இவர்கள் சொல்வதை பெண் வீட்டார்கள் நம்பி விடுகிறார்கள். ஆனால் நாம் சொல்றதை இவர்கள் நம்புவதே இல்லை.

சிலர் ராகுவோடு சேர்ந்தாலும், சனியோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்வதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சரி இப்போது இதை இங்கு ஏன் சொல்றேன் என்ற கேள்வி உங்களுக்கு எழுவது ஞாயமானது தான். செவ்வாய் தோசமே திருஷ்டி பலத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டதுதான்.

செவ்வாய் 7, 8 ல் இருப்பது தான் வலுத்த செவ்வாய் என்று சொல்கிறார்கள்.

ஏழில் இருக்கும் செவ்வாய் ஏழாமிடத்தை கெடுக்கும் இல்லையா?பாவகிரகிரகங்கள் தான் இருக்கும் இடத்தை கெடுப்பார்கள். செவ்வாய் தான் இருக்கும் இடமான ஏழை கெடுத்து தான் பார்க்கும் இடமான லக்னத்தை பார்த்து ஜாதகனின் குணத்தை கெடுக்கும். தனது எட்டாம் பார்வையால் இரண்டாம் இடத்தை பார்த்து குடும்பத்தை கெடுக்கும். இதுதான் மேட்டர்.

எட்டாம் பாவத்தில் இருக்கும் செவ்வாய் இரண்டாம் இடத்தை பார்த்து குடும்பத்தை கெடுக்கும். எட்டாம் இடத்தில் பாவிகள் பலமாக பாவத்தன்மையோடு இருந்தால் ஆயுள் பாதிக்கப்படக்கூடும் இல்லையா? ஆயுள் இருந்தால் தானே அனைத்தையும் அனுபவிக்க முடியும்.

உடனே நமது நேயர்கள் பயந்து விடக்கூடாது. ஆயுளைக்கணிக்க லக்னம், லக்னாதிபதி, சனி, எட்டாமிடம், ஆத்ம காரகன் சூரியன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொடுப்பதுதான் ஆயுள். இது எல்லாமே கெட்டு போனால் மட்டுமே ஒருவருக்கு ஆயுள் தோசத்தை ஏற்படுத்தும். ஒரு சம்பவம் நடக்க வேண்டுமானால் மூன்று கிரகங்களாவது சம்பந்தப்படவேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கனவே இணையத்தின் வழியாக அறிந்து வைத்து இருப்பீர்கள்.

எனவே எட்டில் இருக்கும் செவ்வாய் எட்டாமிடத்தை கெடுக்கும். அது ஆயுள் ஸ்தானம். முக்கியமாக பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம். எட்டில் இருக்கும் செவ்வாய் எட்டாமிடத்தை கெடுப்பதோடு மட்டும் நின்று விடாமல் , தனது ஏழாம் பார்வையால் குடும்பத்தை பார்த்து குடும்பத்தை கெடுக்கும். , , எட்டாம் பார்வையால் மூன்றை பார்த்து தைரியம், வீரியம், ஆண்மை என்று சொல்லப்படக்கூடிய அந்த ஸ்தானம் செல்வாயின் பார்வை எனப்படும் திருஷ்டி பலத்தால் பாதிப்பதே காரணமாகும்.

இதை இங்கு சொல்லவந்த காரணம் திருஷ்டி பலம் என்னும் இந்த டாபிக்குக்கு சம்பந்தப்பட்டது என்பதால்தான்.

அதேபோல தான் நான்காம் இடம் செவ்வாயால் கெட்டால் சுகம் பாதிப்புக்கு உள்ளாகும். பன்னிரண்டாம் இடம் கெட்டால் அயன் சயன போக ஸ்தானம் பாதிக்கப்படும். இந்த இடங்களில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் குறைவு என்பது இப்போது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இரண்டில் இருக்கும் செவ்வாய் இரண்டை கெடுப்பதோடு எட்டாமிடத்தையும் பாதிக்கும். இதுதான் செவ்வாய் தோசத்தின் தாத்பரியம். செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதன் அடிப்படை எனன என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். பொதுவாக 2, 7, 8 ஏன் சுத்தம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More