Forum

Please or Register to create posts and topics.

சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ராசி 2020

2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.

இக்காலகட்டங்களில் கடக ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

கடக ராசிக்கு சனிபகவான் தற்போது 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு கண்டக சனியாக வந்துள்ளார்.

7ம் இடத்தில் சப்தம ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -9ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 1-ஆம் இடத்தையும் ,10ம்ஆம் பார்வையால் 4ம்இடத்தையும் பார்ப்பார்.

கடக ராசியைப் பொறுத்தவரை கண்டகச்சனி ஆரம்பித்தாலும் கவலைப்படத் தேவையில்லை.

தொழில்வளம் சிறப்பாகவே இருக்கும். உற்பத்தி மற்றும் வேலை செய்யும் இடத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

பணத் தட்டுப்பாடுகள் இருந்தாலும் தேவைக்கேற்ற பண வரவு வந்து கொண்டே இருக்கும்.

திருமண வயதை ஒத்த நபர்களுக்கு திருமணம் சில தடைகளுக்கு பின் நல்லபடியாக நடக்கும்.

சிலருக்கு காதல் போன்ற விஷயங்கள் ஏற்பட்டு போராட்டத்தின் பேரில் நல்லபடியாக திருமணத்தில் முடியும் .

ஒரு சிலருக்கு மட்டும் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி இருப்பதால் கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும் .கூட்டுத் தொழிலும் சிலர் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. மற்றபடி பெரிய அளவிற்கு கெடுதல் இல்லை.

மாணவர்கள் கல்வியில் மேன்மை உண்டு . விருப்பத்திற்கேற்ற படிப்புகள் கிடைக்கும்.

குருபகவான் தற்போது 7ம் இடத்தில் இருப்பதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் .வங்கி கடன் கேட்டால் எளிதில் கிடைக்கப் பெறும்.

இருந்தாலும் கடனை அளவோடு வாங்கி கொள்வது நல்லது.

சனி ராசியைப் பார்த்தாலும், குருவின் பார்வையும் ராசிக்கு விழுவது சிறப்பு

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் தாராளமாக செய்யலாம்.

சனி தன் மூன்றாம் பார்வையால் ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு தந்தை சார்ந்த விஷயங்களில் கருத்து வேறுபாடும் ,சொத்து பிரச்சனையும் உண்டாகும்.

சிலருக்கு ஆன்மீக யாத்திரை போகும் வாய்ப்பும் உண்டு.

ராசியை சனி பார்ப்பதால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு தெளியும்.சில நேரத்தில் மனம் சஞ்சலமடையும்.

ஒரு சிலருக்கு வீடு ,மனை, வண்டி வாகனம் போன்ற அனைத்தும் கிடைக்கப்பெறும்.

வீட்டை மராமத்து செய்து கொள்வது நல்லது.வாகனங்களில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு செலவு வைக்கக் கூடும்

சனி ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உடல் நிலை சார்ந்த விஷயங்களில் அக்கறை தேவை.

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அளவோடு முதலீடு செய்து சிறிய அளவில் தொழில் தொடங்கலாம்.

லாபம் ஓரளவுக்கு சீராக இருக்கும்.

திருமணமான தம்பதியருக்கு குழந்தைகள் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு குழந்தைகளால் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறும்.

வேலையில் நல்ல முன்னேற்றமும் ,பணி உயர்வும் கிடைக்கப்பெறும். அதே நேரத்தில் வேலை செய்யும் வேலையில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் மாற்றமும் ,முன்னேற்றமும் இருக்காது. இருப்பது தொடரும். அதேநேரத்தில் கெடு பலனுமில்லை

உடல்நிலை சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

கடக ராசியை பொறுத்த வரை ஆற்று நீர் போல் பெரிய மாற்றமின்றி சீராக வாழ்க்கை ஓடும். பண விஷயங்களில் மற்றும் கடன் சார்ந்த விஷயங்களில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:::

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை திருச்செந்தூர் சென்று வரவும்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More