துலா ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் ருன ரோக சத்ரு ஸ்தானம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 6மிட குருவாகிறார்.
6 மிட குருவாகி கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும்
விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும்
தனம் குடும்பம் வாக்கு என்று சொல்லக்கூடிய 2 மிடத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் அசுப பலன்கள் நடந்தேறும். இது மிக மோசமான இடம்.
“சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்” என்பது ஜோதிடப் பாடல்
” தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு தார்வேந்தர் பகை உண்டு ரோக முண்டு” – என்கிறது புலிப்பாணி பாடல்
இதன் பொருள் இந்த காலகட்டத்தில் தரையில் கிடக்கும் தங்கத்தை தன் கைப்பட்டு எடுத்தால் பித்தளை ஆக மாறிவிடும் அந்த அளவுக்கு யோகம் எதிர்மறையாகச் செயல்படும். எதிரி கடன் வைத்தியச் செலவு களவு திருட்டு ஏமாற்றம் இழப்புகள் ஏற்படலாம்.
- உடல்நிலையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்
- வைத்தியச் செலவுகள் அடிக்கடி ஏற்படும்
- வேலைகளில் மாற்றங்கள் ஏற்படும் (இட மாற்றம்/ வேலை மாற்றம்)
- இருக்கும் வேலைகளில் கடுமை இருந்து கொண்டே இருக்கும் பல பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
- வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும் இருந்தாலும் கடுமையான போக்கு இருந்து கொண்டே இருக்கும்
- புதிய கௌரவப் பதவிகள் கிடைக்கும் அதனால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது
- மருத்துவமனையில் உள்ளவர்கள் பரிபூரண குணம் அடைய வாய்ப்புகள் ஏற்படும்
- தண்டச் செலவுகள் கட்டுக்குள் வரும்
- சுப விரயச் செலவுகள் ஏற்படும் ( கடன் வாங்கியும் செய்யக்கூடிய கட்டாய நிலை உண்டாகும்) அதாவது வீடு கட்டுதல் புதிய வண்டி வாகன வசதிகள் திருமண செலவுகள் புதிய முதலீடுகள் செய்தல்.
- புதிய முதலீடுகள் செய்வதில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் தனியார் நிறுவனங்களில் அல்லது தனியார் நபர்களிடம் முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- உங்கள் தேவைக்கேற்ப தனவரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.
- கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்
- எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும்.
- குடும்பத்தில் இருந்த பிணக்குகள் சரியாகும்
- வரன் பேச்சுவார்த்தைகள் நடக்கும். வரன் முடிவாகும். திருமணம் நடந்தேறும்.
- அடிக்கடி விருந்தினர் வருகை உண்டு அதனால் செலவுகளும் ஏற்படும்.
- கட்டுக்கடங்காத விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- வெளிநாடு பயணங்கள் அமையும். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
- அடிக்கடி வெளிநாடு பயணங்கள் உண்டாகும்
- பண விஷயங்களில் மிக மிக எச்சரிக்கையாக அவசியம்.
- நகை பணம் களவு போக வாய்ப்பு உண்டு அல்லது தொலைந்து போக வாய்ப்பு உண்டு எனவே எச்சரிக்கை அவசியம்.
- வாக்கு கொடுப்பது ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்.
- எதிரிகள் பிரச்சனைகள் அதிகரிக்கும்
- வங்கிகளில் பண நடவடிக்கைகளில் செயல்படும்போது மிகுந்த கவனம் தேவை
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
அந்தணர்களுக்கு வேண்டிய உதவிகள்
ஒருமுறை யானைக்கு கரும்பு கட்டு வாங்கித்தர பல பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் அல்லது கோவிலில் ஒரு நாள் ஆகாரத்துக்கு பணம் கட்டினால் சிறப்பு
எச்சரிக்கை:
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்