மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025

0

திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கப்படி சித்திரை மாதம் 18 (01.05.2024) புதன்கிழமை பகல் 1 மணியளவில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

கடந்த ஓராண்டாக உங்களுக்கு இரண்டாம் இடத்தில் தன குருவாக இருந்தார் இந்த காலகட்டத்தில் பலவிதமான சுப பலன்களான தனம் வாக்கு வித்தை வளர்ச்சி அடைந்திருக்கும் தாராளமாக பணப்புழக்கம் ஏற்பட்டிருக்கும் சுப காரியங்கள் புதிய முயற்சிகள் முன்னேற்றம் வெற்றியை வாரி வழங்கி இருக்கும்.

தற்போது உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் பெயர்ச்சி ஆகிறார் இது அசுபமான பலன்களையே தரும் நிலையில் உள்ளது ஆகையால் கீழ்கண்ட அசுப பலன்கள் நடந்தேறும்.

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக ஏழாம் இடத்தையும் ஏழாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தையும் ஒன்பதாம் பார்வையாக பதினோராம் இடத்தையும் பார்வை செய்கிறார்.
“தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்” என்பது ஜோதிட பாடல்
” தாளப்பா ஆறுக்கு தோஷம் உண்டு மூன்றில் தார்வேந்தர் பகையும் உண்டு ரோகமுண்டு” புலிப்பாணி பாடல்.

  • நம்மை சுற்றி உள்ளவர்கள் உற்றார் உறவினர்கள் நட்பு இவைகள் அழியும்,
  • பதவிகள் பறிபோகும்,
  • பண இழப்புகள் அதிகரிக்கும்,
  • பொருள் விரயங்கள் அதிகரிக்கும்,
  • இளைய சகோதரர்கள் வழியில் தொந்தரவுகள் உண்டாகும்,
  • எழுத்து ஒப்பந்தங்களில் பிரச்சனைகளை சந்தித்தும் காலகட்டம்,
  • தகவல் பரிமாற்ற தொடர்புகள் பாதிக்கப்படும்,
  • தோள்பட்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும்,
  • உடல் நலம் மனநலம் பாதிக்கப்படும்.

இருந்தாலும் கீழ்கண்ட சுப பலன்களையும் தருவார்.

  • கணவன் மனைவி வழியில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் ஒற்றுமை ஓங்கும்,
  • கணவன்/மனைவியால் ஆதாயங்கள் பெரும் காலகட்டம் அவர்களின் ஒத்துழைப்பால் நன்மைகள் ஏற்படும்,
  • தூர பயணங்கள் வெளியிடங்களில் நன்மை ஏற்படும்,
  • பாக்கியங்கள் கிட்டும்,
  • பெண்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும் கர்ப்பப்பையில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்,
  • இஷ்ட தெய்வ வழிபாடுகளால் நன்மைகள் உண்டாகும்,
  • அசாதாரண நிலைகளும் நன்மையில் முடியும்,
  • நீண்ட கால பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்,
  • மருத்துவத்தின் மூலம் நீண்ட கால நோய்கள் தீர்வுக்கு வரும் ரோகம் மாறும்.

பரிகாரம் :

  • திருச்செந்தூர் முருகன் வழிபாடு.
  • வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய்விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வர தொல்லைகள் குறையும்.
  • குருமார்களுக்கு வஸ்திர தானம்.
Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More