2019 புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி – New year Rasi Palan 2019 Dhanu Rasi

Puthandu rasi palan 2019 Dhanu Rasi - New Year Rasi palan Dhanu Rasi 2019 in Tamil

2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் தனுசு ராசி

(New Year Rasi Palan 2019 Dhanu Rasi – Puthandu Rasi Palan Dhanu Rasi 2019 in Tamil)

ராகு_கேது பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Dhanu Rasi)

தனுசு ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???

 

2019 ம் ஆண்டில் குருபகவான் 12 ம் இடத்திலும், சனிபகவான் உங்களது ஜென்ம ராசியிலும், மார்ச் மாதத்திற்கு பிறகு கேதுவும் ஜென்ம ராசியில் சனியுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். களத்திர பாவமான ஏழாம் பாவத்தில் ராகு ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.இந்த 2019 உங்களுக்கு எப்படி இருக்க போகின்றது.

முதலில் தனுசு ராசிக்காரர்கள் மிக வேகமான செயல்பாடு உள்ளவர்கள்..
சனி உங்கள் வேகத்தை குறைப்பார்.
சனி உங்கள் ராசியிலே இருக்கிறார்.
தனுசு ரொம்ப கௌரவம் பார்க்கும்.
சனி அந்த கௌரவத்தை குலைப்பார்.
தனுசு ராசிக்காரர்களின் ராசியாதிபதி குருபகவான்.எனவே இவர்கள் பெருந்தன்மை ஆனவர்கள். நேர்மையானவர்கள்.ஆனால் 2019 ல் சனி உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக நேர்மை தவற வைப்பார்.

சனி ராசியிலே சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஈசியாக முடியக்கூடிய வேலைகள் கூட இழுத்தடிக்கும்.இங்கிருந்து அங்க ,அங்கிருந்து இங்கே என்று அலைக்கழிப்பை தரும். வெட்டி அலைச்சல்களை தரும். அதனால் பிரயோசனம் இருக்குமா என்றால்??? பிரயோசனம் இருக்காது.

எல்லாவற்றிலும் தடைகள் இருக்கும். ஏன்னா சனி முடவன் ,மந்தன் .அவர் உங்களது ராசியில் ஜென்ம சனியாக உள்ளார்.
எந்த காரியமும் இழுபறியிலேயே முடியும்.உங்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். கோபத்தை முடிந்தளவு குறைத்து கொள்ளுங்கள். கோபத்தை குறைக்க காளியம்மன்,துர்க்கை அம்மன் வழிபாடு செய்து கொள்ள கோபத்தை குறைத்து கொள்ள முடியும்.

சனி ராசியிலிருந்து மூன்றாம் இடத்தை பார்வையிடுவதால் உங்களது இளைய சகோதரர்களுக்கு யோகமான ஆண்டாக 2019 இருக்கும். இளைய சகோதரர்களால் நன்மைகள் இருக்கும் ஆண்டாக 2019 இருக்க போகின்றது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தைரியத்துடன் அத்துணை பிரச்னைகளையும் சமாளித்து விடுவீர்கள். ஏன்னா சனி தன்வீட்டை தானே பார்த்து மூன்றாம் இடத்தை வலுப்படுத்துகிறார்.

சனி ஏழாம் வீட்டை பார்த்து திருமணம் நடக்காத ஆண்,பெண் இருபாலருக்கும் மார்ச் மாதம் வரை திருமணத்தை தாமதப்படுத்துவார்.அதன்பின் திருமண விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாத ஆண் பெண் இருபாலருக்கும் 11.4.2019 முதல் 11.8.2019 வரை திருமணம் மிக வேகமாக நடந்து முடியும். அப்போது குரு பன்னிரண்டாம் பாவத்தில் வக்ரமாக இருப்பார்.அந்த காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு யோகமான காலமாக இருக்கும். நல்ல தனவரவுகள் உண்டாகும் காலமாகும். அரசு உதவி கிடைக்க கூடிய காலமாகும். கல்யாணம், காதுகுத்து,சீமந்தம், திரட்டி, வளைகாப்பு போன்ற சுபகாரியங்கள் நடக்க கூடிய காலகட்டமாகும். பொதுவாக ஜென்ம சனியில் எல்லா காலங்களுமே ,அதாவது வருட முழுவதுமே தீமைகள் நடைபெறாது.

இந்த ஜென்ம சனி காலத்திலும்,2019 ஆண்டின் முற்பகுதிகளில் குருவும் சாதகமற்ற பன்னிரண்டாம் பாவத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு விரையங்களை அதிகப்படுத்தும். அலைச்சல்களை அதிகப்படுத்தும். குருபகவான் நான்காம் பாவமான தன்வீட்டை தானே பார்ப்பதால்,நான்குக்கு உடையவனின் தசை அல்லது புக்தி ,அல்லது சுக்கிரன் தசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கு கடும் முயற்சியின் பேரில் சொந்த வீடு அமைந்து விடும்.

இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் ஒத்தி வீட்டுக்கும் , ஒத்தி வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீட்டுக்கும் செல்ல வைப்பார் இந்த நான்காம் வீட்டை பார்த்த குருபகவான்.
பன்னிரண்டாம் வீட்டில் இருந்து ஆறை பார்ப்பதால் விரையங்களை அதிகப்படுத்தி கடனை உண்டு பண்ணுவார். எட்டாம் வீட்டை பார்த்த குரு கடன்,வம்பு, வழக்கு இவைகளை தருவார்.

ராகு  கேது பெயர்ச்சி பலன்கள் 2019 தனுசு ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 8 ,2 ம்மிடங்களில் இருந்து குடும்பத்தில் பிரச்னைகளையும், கடனையும், அரிட்டம், துன்பம், தொல்லைகளை கொடுத்து வந்தார். பாவக்கிரகங்கள் ,2,4,7,8,12 போன்ற இடங்களில் இருக்கக்கூடாது.
இதுவரை 2,8 ல் இருப்பதை காட்டிலும்,
இனி மாறப்போகும் 1,7 பரவாயில்லை ரகம்தான்.

பொதுவாக கேது ,ராசி அல்லது லக்னத்தோடு சுபத்தன்மை பெற்று சம்பந்தப்படும்போது அளவிறந்த ஞானத்தை தரும். வயதுக்கு மீறிய ஞானத்தை தரும்.60 வயதில் வரவேண்டிய ஞானத்தை, பக்குவத்தை ,அனுபவத்தை ,35 வயதிலேயே கேதுபகவான் தந்து விடுவார்.

இந்த அமைப்பில் கேது +சனி சேர்க்கை தனுசு ராசியில் அமைவது ஆன்மிக, டிரஸ்ட், கோவில், அறநிலையத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு கேது நன்மைகளை தருவார். கேதுவால் நன்மைகள் இருக்கக்கூடிய ஆண்டாக 2019 இருக்கும்.

ராகு ஏழாம் இடத்தில் இருக்கிறார். ராகு தான் இருக்கும் இடத்தின் அதிபதியை போல செயல்படுவார். மிதுனம் ராகுவுக்கு நட்பு வீடு.புதனும் நட்பு கிரகம் என்பதால் ராகுவால் பெரிய அளவில் கெடுதல்கள் இருக்காது. ராகு தன்னை பார்க்கும் கிரகத்தின் பலனை பிடுங்கி தானே (அவரே)தருவார் என்பதால் , ராசிக்கு குடும்பாதிபதியான சனியை பார்த்து குடும்பத்தை ஏற்படுத்தி தருவார்.
சிலருக்கு சுய ஜாதகத்திலும் காதல் திருமணம் என்ற விதியிருந்து ,ராகு,கேது,சனி போன்ற பாவக்கிரகங்கள் ஏழாம் இடத்தை பார்ப்பதால் 2019ல் காதல்,கலப்பு திருமணங்கள் நடைபெறும்.அதுவும் ஏப்ரல் __ ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைபெறும்.

சுயஜாதகத்தில் சனி +ராகு ஐந்தாம் இடத்தில் இருந்து அது இருவரில் ஒருவருக்கு பகைவீடாகவோ அல்லது நீச வீடாகவோ இருந்து பாவக்கிரகங்கள் சம்பந்தப்பட்டு தசை நடந்தால் கண்டிப்பாக காதல் திருமணம் நடக்கும். குடும்பாதிபதி +குடும்ப ஸ்தானம் எந்தளவுக்கு பலவீனமாக உள்ளதோ அந்தளவுக்கு வசதி குறைவான அல்லது வேற்றினத்து ஜாதியில் திருமணம் நடக்கும்.

ஏழாம் இடத்தில் சம்பந்தப்பட்ட பாவக்கிரகங்களால் கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் குறைவாக இருக்கும். ராசியோடு சம்பந்தப்பட்ட பாவக்கிரகங்களால் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்பத்திற்காக கடுமையாக உழைத்த உங்களை யாரும் மதிக்காமல் அவர்களின் தேவைமுடிந்தவுடன் கரிவேப்பிலை மாதிரி பயன்படுத்தி கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்து, நன்றி மறந்து உங்கள் மனதை காயப்படுத்துவார்கள்.

சிலர் உடல்கவர்ச்சியால் காதல் கொண்டு, அந்த காதலில் உண்மை யில்லாததால் அந்த காதல் தோல்வி கண்டு மனம் வருந்தும் படி வரும்.மனக்குழப்பங்கள், மனச்சஞ்சலங்கள் கண்டிப்பாக அவர் அவர்கள் வயதுக்கு ஏற்ப இருந்தே தீரும்.

தனுசு ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது

1)கணவன் ,மனைவி இருவரும் ,ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.

2)கோபங்களை குறைத்து கொள்ள வேண்டும்

3)வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது.அலுவலகத்தில் தன்னை விட தகுதி குறைவானவருக்கு பதவி உயர்வு கொடுத்து விட்டார்கள் என்பதற்காக ஒருவர் வேலையை விட்டு விட்டார். இப்போது வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்.

4)வேலைப்பளு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பதால் டார்கெட் பிரச்சனை இருக்கும் என்பதால் அதிகமாக உழைக்க தயாராக இருங்கள்.

5)ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். கடன் வாங்க தேவையில்லை.

6)யோசித்து பேசுங்கள். பேச்சில் நிதானம் ரொம்ப முக்கியம்.

7) மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.

8) 8) 8 ) 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடைப்பயிற்சி, உடல்பயிற்சி,தியானம், யோகா செய்து உங்கள் உடல்நலத்தையும்,மனநலத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

9) ரொம்ப நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். சட்டத்திற்கு உட்பட்டு ,விதிகளுக்கு உட்பட்டு, பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நேர்மையாக உண்மையாக,கண்ணியத்தோடு நேரம் தவறாமல், கடமையை செய்து வர சனிபகவான் உங்களை எதுவும் செய்ய மாட்டார்.

10) எல்லா ஜோதிடர்களும் சொல்வதை போல ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போடக்கூடாது. பின்னால் நீங்கள் அதற்கு பொறுப்பாவார்கள்.முக்கியமாக பேராசை படக்கூடாது.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More